மேற்கிந்திய அணிக்கு எதிரான தொடரை இழந்தது இலங்கை

1 Min Read

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வி இன்றி முடிந்ததை அடுத்து மேற்கிந்திய தீவுகள் அணி டெஸ்ட் தொடரை 1–0 என கைப்பற்றியது.

முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸால் தோல்வியை சந்தித்த இலங்கை அணி தொடர் தோல்வியை தவிர்ப்பதற்கு கட்டாய வெற்றிக்காகவே அன்டிகுவாவில் நடைபெற்ற இந்த டெஸ்ட் போட்டியில் களமிறங்கியது. எனினும் இரு அணிகளும் ஐந்து நாட்களிலும் துடுப்பாட்டத்தில் சோபித்த நிலையிலேயே இலங்கை அணி தொடர் தோல்வியை சந்தித்தது. போட்டியின் கடைசி நாளான நேற்று முன்தினம் (07) பகல் போசண இடைவேளைக்கு பின்னர் மேற்கிந்திய தீவுகளுக்கு 302 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

எனினும் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த மேற்கிந்திய தீவுகள் ஆட்ட நேர முடிவில் 40 ஓவர்களுக்கு விக்கெட் இழப்பின்றி 109 ஓட்டங்களை பெற்றது.

இந்த டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 549 ஓட்டங்களைப் பெற்றதோடு மேற்கிந்திய தீவுகள் தனது முதல் இன்னிங்ஸுக்காக 499 ஓட்டங்களைக் குவித்தது. இந்நிலையில் இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 251 ஓட்டங்களைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இதன்படி மேற்கிந்திய தீவுகள் அணி 11 முயற்சிகளின் பின்னரே டெஸ்ட் தொடர் ஒன்றில் வெற்றியீட்டியுள்ளது. கடைசியாக அந்த அணி 2023 இலேயே டெஸ்ட் தொடர் ஒன்றில் வென்றதோடு சொந்த மண்ணில் அந்த அணி டெஸ்ட் தொடர் ஒன்றை வென்றது 2022 ஆம் ஆண்டிலாகும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *