Veronica III கப்பல், மதுரோ கைது செய்யப்பட்ட அதே நாளில் வெனிசுலாவை விட்டு புறப்பட்டு, சுமார் 20 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் ஏற்றிச் சென்றது. இந்நிலையில், “இந்த கப்பல் ட்ரம்ப் உத்தரவை மீறி தப்பிக்க முயன்றது. கரீபியக் கடலிலிருந்து இந்தியப் பெருங்கடல் வரை அதை கண்காணித்து, இறுதியில் கைப்பற்றினோம்” என்று Pentagon தெரிவித்துள்ளது. இந்த கப்பல் பனாமா கொடியுடன் இயங்கினாலும், அமெரிக்க நிதி அமைச்சகத்தின் தடைகளில் ஈரான் மற்றும் வெனிசுலாவுடன் தொடர்புடையதாக பட்டியலிடப்பட்டுள்ளது. கடந்த வாரம், அமெரிக்கா மற்றொரு கப்பல் Aquila II-யையும் இந்தியப் பெருங்கடலில் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

2 Min Read

சமீபத்தில் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள எப்ஸ்டீன் ஆவணங்களில், பில் கேட்ஸ் மற்றும் நோர்வே முக்கிஸ்தர் ஒருவருடன் இணைந்து உலகளாவிய பெருந்தொற்று குறித்து எப்ஸ்டீன் விவாதித்துள்ளதாக அதிரவைக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

2015 ஜூன் மாதம்

உலகளாவிய பெருந்தொற்று ஏற்பட்டால் அதற்கு தயாராவது எப்படி என்பது தொடர்பில் ஜெனீவாவில் ஒரு சர்வதேச மாநாடு நடத்தவும் இவர்கள் மூவரும் திட்டமிட்டுள்ளதாகவே, அந்த மின்னஞ்சல்களில் இருந்து தெரிய வருகிறது.

உலகளாவிய பெருந்தொற்று குறித்து பில் கேட்ஸ் உடன் 2015ல் விவாதித்த எப்ஸ்டீன் | Bill Gates Epstein Global Pandemic

சர்வதேச சமூகம் எதிர்கொண்ட முந்தைய சவால்களான எபோலா மற்றும் போலியோவை அடிப்படையாகக் கொண்ட ஒரு தயாரிப்பாக இது இருக்க வேண்டும் எனவும் அந்த மின்னஞ்சல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எப்ஸ்டீன் மற்றும் பில் கேட்ஸுடன் கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்டவர் நோர்வேயை சேர்ந்த சர்வதேச அமைதி நிறுவனத்தின் முன்னாள் தலைவரான Terje Rod-Larsen என்பவரே.

இவர்களுடன், உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் மார்கரெட் சான், ஐ.சி.ஆர்.சி தலைவர் பீட்டர் மௌரர், ஜெனீவாவில் உள்ள ஐ.நா. அலுவலகத்தின் பொறுப்புத் தலைவர் மைக்கேல் மோலர் மற்றும் அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் கெவின் ரூட் ஆகியோரும் கலந்துகொண்டுள்ள அழைக்கப்பட்டுள்ளனர்.

இந்த மின்னஞ்சலானது 2015 ஜூன் மாதம் 2 ஆம் திகதி அனுப்பப்பட்டுள்ளது. இன்னொரு கவனிக்கத்தக்க விடயமாக இங்கிலாந்தின் சர்ரேயை தளமாகக் கொண்ட உயிரியல் ஆராய்ச்சி அமைப்பான பிர்பிரைட் நிறுவனம், நவம்பர் 2018 இல் காப்புரிமை ஒன்றை வாங்கியுள்ளது.

அது IBV மற்றும் பிற விலங்குகள் உள்ளிட்ட பறவைகளில் சுவாச நோய்களைத் தடுக்க தடுப்பூசியாகப் பயன்படுத்தக்கூடிய பலவீனமான கொரோனா வைரஸின் வளர்ச்சியை உள்ளடக்கியது.

உலகளாவிய பெருந்தொற்று குறித்து பில் கேட்ஸ் உடன் 2015ல் விவாதித்த எப்ஸ்டீன் | Bill Gates Epstein Global Pandemic

கேட்ஸ் அறக்கட்டளை

இதில், இந்த Pirbright நிறுவனத்திற்கு நிதியளிப்பவர்கள் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை என்றும் கூறப்படுகிறது. உலகளாவிய காய்ச்சல் தடுப்பூசியை உருவாக்குவதற்காக, 2013 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில், பிர்பிரைட் நிறுவனத்திற்கு பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை இரண்டு மானியங்களை வழங்கியுள்ளது.

மனிதர்களுக்குப் பரவக்கூடிய பண்ணை விலங்குகள் மற்றும் வைரஸ்களின் விளைவுகளை எதிர்த்துப் போராடுவதற்கான தடுப்பூசி அது. ஆனால் கால்நடைகளுக்கான பிர்பிரைட்டின் தடுப்பூசிக்கு நிதியுதவி செய்வதை கேட்ஸ் அறக்கட்டளை மறுத்துள்ளது.

2019 அக்டோபர் மாதம் கோவிட் பெருந்தொற்று தொடர்பில் உத்தியோகமாக அறிவிக்கப்படும் சில மாதங்களுக்கு முன்னர் உலக பொருளாதார மன்றம் மற்றும் கேட்ஸ் அறக்கட்டளையுடன், ஜான்ஸ் ஹாப்கின்ஸ் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு மையம் இணைந்து, வௌவால்களிடமிருந்து பன்றிகளுக்கும், மக்களுக்கும் பரவும் பெருந்தொற்று தொடர்பில் விளக்கமளிக்கும் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்தனர்.

உலகளாவிய பெருந்தொற்று குறித்து பில் கேட்ஸ் உடன் 2015ல் விவாதித்த எப்ஸ்டீன் | Bill Gates Epstein Global Pandemic

மேலும், 2019 செப்டம்பர் மாதம் biotech நிறுவனத்தில் 55 மில்லியன் டொலர் தொகையை கேட்ஸ் அறக்கட்டளை முதலீடு செய்தது, இதனால் அந்த நிறுவனத்திற்கான மொத்த முதலீடு 100 மில்லியன் டொலராக அதிகரித்தது.

இதில் கோவிட் தொற்றுக்கான தடுப்பூசி தயாரிக்க BioNTech மற்றும் Pfizer நிறுவனங்களுக்கே முதலில் அனுமதி வழங்கப்பட்டது.

எப்ஸ்டீன் ஆவணங்களில் வெளியான மின்னஞ்சல்களில் கோவிட் தொடர்பில் சதி திட்டம் தீட்டியதாக தரவுகள் இல்லை. ஆனால், 2019ல் அறிவிக்கப்படும் பெருந்தொற்றுக்கு என 2015ல் இருந்தே பில் கேட்ஸ் மற்றும் எப்ஸ்டீன் தரப்பு தயாரானதை அம்பலப்படுத்தியுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *