நாட்டின் கிழக்குப் பகுதியில் நீடித்த வரட்சி நிலவும் ஒரு பகுதியில், பட்டினியால் குறைந்தது 19 பேர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியானதை அடுத்து, உகண்டா அவசரகால உணவு நிவாரண விநியோகத்தை ஆரம்பித்துள்ளது.
கரமோஜா பகுதியில் பல மாதங்களாக நிலவிவரும் இவ்வரட்சியினால் உணவுப் பயிர்ச்செய்கை பெரிதும் அழிவடைந்துள்ளது. அதன் விளைவாக 1.5 மில்லியன் மக்கள் ஊட்டச்சத்துக் குறைபாட்டுக்கும் உள்ளாகியுள்ளனர்.
பருவ காலத்தில் எதிர்பார்க்கப்பட்ட மழை கிடைக்கப்பெறாததால் பயிர்கள் சேதமடைந்து, கரமோஜா பகுதியில் உள்ள 1.5 மில்லியன் மக்கள் கடுமையான உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றனர்.
இந்நிலையில் உகண்டா அரசாங்கம் அடுத்த இரண்டு மாதங்களிலும் 9,400 தொன் நிவாரண உணவை விநியோகிக்கத் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதன் நிமித்தம் பாராளுமன்றம் ஒதுக்கியுள்ள 9 மில்லியன் பவுன் அவசரகால நிதி பயன்படுத்தப்படும். அவற்றைப் பயன்படுத்தியே தற்போது இப்பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
த கார்டியன்




