தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான யுன்னான் சர்வதேச தகவல் தொடர்பு மையத்தின் அழைப்பின் பேரில், இலங்கை – சீனா சமூக மற்றும் கலாசார ஒத்துழைப்பு சங்கத்தின் தலைவரும், இலங்கை-சீன நட்பு தூதுவருமான இந்திரானந்த அபேசேகர ஒருங்கிணைப்பில், 20 பேர் கொண்ட இலங்கை ஊடகக் குழுவினர் தற்போது சீனாவில் விசேட ஆய்வுச் சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொண்டனர்.
இக்குழுவினர் நேற்று (13) யுன்னான் மாகாணத்தின் புவெர் நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற ‘கோபி கண்டுபிடிப்பு மையத்தை’ பார்வையிட்டனர்.
தற்போதைய சீன மக்களிடையே கோபி குடிக்கும் பழக்கம் மிக வேகமாக அதிகரித்து வருவதாக இந்த மையத்தின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்த மையத்தில் மேற்கொள்ளப்பட்ட அதிநவீன ஆராய்ச்சிகளின் மூலம் 300 இற்கும் மேற்பட்ட புதிய கோபி ரகங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
உலக மக்களின் வெவ்வேறு சுவைகளுக்கு ஏற்ப, வெறும் பானமாக மட்டுமன்றி காபியைக் கொண்டு தயாரிக்கப்பட்ட கோபி பற்பசை, கோபி குளியல் ஜெல், கோபி ஃபேஸ் மாஸ்க் போன்ற பல புதுமையான தயாரிப்புகள் இங்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
கோபி யில் உள்ள புரதம் மற்றும் அமிலத்தன்மை போன்ற தரக் குறியீடுகளைத் துல்லியமாகப் பரிசோதிப்பதற்காக, இந்த மையம் தனக்கே உரித்தான காப்புரிமை பெற்ற (Patented) அதிநவீனத் தரப் பரிசோதனை இயந்திரத்தைக் கொண்டுள்ளது.
உலகப் புகழ்பெற்ற ‘பாரிஸ்டா’ பிராண்டுகளுக்கான கோபி தயாரிப்புப் பயிற்சிகளை வழங்கி, உலகத்தரம் வாய்ந்த சான்றிதழ்களை வழங்கும் உத்தியோகபூர்வ மையமாகவும் இது செயல்படுகிறது.
சீனாவில் உற்பத்தி செய்யப்படும் ஒட்டுமொத்த காபியில் 90 சதவீதத்திற்கும் அதிகமான கோபி , இந்த யுன்னான் மாகாணத்தில் இருந்தே உற்பத்தி செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
காபி சந்தையில் உற்பத்தியாளர்களையும் தொழிலதிபர்களையும் இணைக்கும் ஒரு பாலமாக விளங்கும் இந்த மையத்தில், சீன கோபி கலாசாரத்தின் கலைநயமிக்க அற்புதம் குறித்த நேரடி அனுபவத்தை இலங்கை ஊடகவியலாளர்கள் குழுவினர் பெற்றுக் கொண்டனர்.



