வைரஸ் பாதித்த உல்லாசக் கப்பலில் இருந்து பயணிகள் வெளியேற்றம்

2 Min Read

வைரஸ் பாதிப்புக்குள்ளான நெதர்லாந்தின் உல்லாசக் கப்பல் சர்ச்சைக்குரிய வகையில் ஸ்பெயின் நாட்டின் டெனெரிஃபில் நங்கூரமிட்டதைத் தொடர்ந்து, அதிலிருந்த பயணிகள் இறுதியாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மாட்ரிட் மருத்துவமனை

எம்.வி. ஹோண்டியஸ் கப்பலில் மேற்கொள்ளப்பட்ட கடுமையான சுகாதாரப் பரிசோதனைகளில் தேர்ச்சி பெற்ற பிறகு, நிம்மதியடைந்த 14 ஸ்பெயின் நாட்டவர்கள் சிறிய படகுகளில் வெளியேற்றப்பட்டனர்.

வைரஸ் பாதித்த உல்லாசக் கப்பலில் இருந்து பயணிகள் வெளியேற்றம்: பிரித்தானியர்கள் நிலை | Virus Cruise Ship Docks

அவர்கள் தற்போது ஒரு இராணுவ விமானத்தில் ஏற்றப்பட்டு, அவர்களை மாட்ரிட்டில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட உள்ளனர்.

எம்வி ஹோண்டியஸ் கப்பல் காலை 6 மணிக்குச் சற்றுப் பிறகு டெனெரிஃபேயை வந்தடைந்தது, அதைத் தொடர்ந்து உடனடியாக அபாயப் பாதுகாப்பு உடைகளை அணிந்த பொது சுகாதார அதிகாரிகள் அதில் ஏறினர்.

அறிகுறியற்ற பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்கள், நாடுகளின் அடிப்படையில் ஐந்து பேர் கொண்ட குழுக்களாக இறக்கிவிடப்பட்டு, அவர்களைத் தாயகம் திரும்ப அழைத்துச் செல்லக் காத்திருக்கும் விமானங்களுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

கப்பலில் எஞ்சியிருப்பவர்களில் எவருக்கும் ஹன்டாவைரஸ் அறிகுறிக் காட்டவில்லை. பிரித்தானிய நிறுவனமான டைட்டன் ஏர்வேஸின் பயணிகள் விமானம் உட்பட ஆறு விமானங்கள் டெனரிஃப் தெற்கில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

முதல் விமானமானது ஸ்பானிய இராணுவ விமானம். இரண்டாவது விமானம் நெதர்லாந்துக்கு சொந்தமானது, அதில் பெல்ஜியம் நாட்டவர்கள், ஜேர்மானியர்கள், கிரேக்கர்கள் மற்றும் சில பணியாளர்களும் பயணம் செய்வார்கள்.

வைரஸ் பாதித்த உல்லாசக் கப்பலில் இருந்து பயணிகள் வெளியேற்றம்: பிரித்தானியர்கள் நிலை | Virus Cruise Ship Docks

150 பயணிகள்

இதனிடையே, ஏற்பாடுகளைச் செய்யாத பிற நாடுகளுக்காக, நாளை இரண்டாவது நெதர்லாந்து விமானம் ஒன்று வந்து பணிகளை மேற்கொள்ளும். அவுஸ்திரேலியர் மற்றும் ஒரு நியூசிலாந்தியருடன் புறப்படும் கடைசி விமானம் நாளை மதியம் புறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரித்தானியர்கள் பிர்கன்ஹெட்டில் உள்ள அரோவ் பார்க் மருத்துவமனைக்கு விமானத்தில் அழைத்துச் செல்லப்படுவார்கள். இந்த மருத்துவமனைதான் 2020-ஆம் ஆண்டில் கோவிட் தொற்று இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டவர்களைத் தனிமைப்படுத்தவும் பயன்படுத்தப்பட்டது.

வைரஸ் பாதித்த உல்லாசக் கப்பலில் இருந்து பயணிகள் வெளியேற்றம்: பிரித்தானியர்கள் நிலை | Virus Cruise Ship Docks

வைரஸ் பாதிப்புக்கு இலக்கான அந்த உல்லாசக் கப்பலில் கிட்டத்தட்ட 150 பயணிகள் பல நாட்கள் தங்கள் உயிருக்கு அஞ்சி வாழ்ந்தனர். ஹன்டா வைரஸின் அறிகுறிகள் தென்படாதவர்கள் மட்டுமே கப்பலிலிருந்து வெளியேற்றப்படுவார்கள்; இவர்களில் ஸ்பானியர்கள் முதலில் மாட்ரிட்டில் உள்ள ஒரு இராணுவ மருத்துவமனைக்கு விமானத்தில் செல்வார்கள்.

பயணிகள் சமூக இடைவெளியுடனும் முகக்கவசம் அணிந்தபடியும் ராணுவப் பேருந்தில் விமான நிலையத்திற்குப் பயணம் செய்வார்கள். அதன்பிறகு ஹோண்டியஸ் கப்பல், நெருங்கி வரும் புயலைத் தவிர்க்க, ராட்டர்டாமை நோக்கித் தனது பயணத்தைத் தொடரும்  என்றே தகவல் வெளியாகியுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *