ட்ரம்ப் அழைப்பை ஏற்க மறுத்த நாடுகள் – மோசமான எதிர்காலமாக இருக்கும் என எச்சரிக்கை

2 Min Read

ஹார்மோஸ் நீரிணையை திறக்க நட்பு நாடுகள் போர் கப்பல்கள் அனுப்ப மறுத்த நிலையில் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஹார்மோஸ் நீரிணை

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதல் காரணமாக ஈரான் ஹார்மோஸ் நீரிணையை(strait of hormuz) மூடியுள்ளது.

ட்ரம்ப் அழைப்பை ஏற்க மறுத்த நாடுகள் - மோசமான எதிர்காலமாக இருக்கும் என எச்சரிக்கை | Trump Warn Nato For Refuse Send War Ships Hormuz

உலகின் 20 சதவீத எரிபொருள் விநியோகம் இந்த பகுதியின் வழியே நடைபெற்று வருவதால், இந்த மூடல் காரணமாக கச்சா எண்ணெய் விலை பாரிய உயர்வை எட்டியுள்ளது. பல நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

முன்னதாக ஹார்மோஸ் நீரிணை வழியே செல்லும் கப்பல்களுக்கு அமெரிக்க போர் கப்பல்கள் பாதுகாப்பு வழங்கும் என ட்ரம்ப் கூறினார்.

டிரம்ப் விடுத்த அழைப்பு நிராகரிப்பு

தற்போது, ஹார்மோஸ் நீரிணையை திறக்க போர் கப்பல்களை அனுப்புமாறு நேச நாடுகளுக்கு ட்ரம்ப் அழைப்பு விடுத்தார்.

இது தொடர்பாக தனது நிர்வாகம் ஏற்கனவே 7 நாடுகளைத் தொடர்பு கொண்டுள்ளதாகவும், ஆனால் அந்த நாடுகளை அடையாளம் காணவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

ட்ரம்ப் அழைப்பை ஏற்க மறுத்த நாடுகள் - மோசமான எதிர்காலமாக இருக்கும் என எச்சரிக்கை | Trump Warn Nato For Refuse Send War Ships Hormuz

முன்னதாக சீனா, பிரான்ஸ், ஜப்பான், தென் கொரியா, பிரிட்டன் மற்றும் பிற நாடுகள் இதில் பங்கேற்கும் என சமூக ஊடக பதிவில் தெரிவித்தார்.

“இந்த நாடுகள் தங்கள் சொந்த பிரதேசத்தை உள்ளே வந்து பாதுகாக்க வேண்டும் என்று நான் கோருகிறேன், ஏனெனில் அது அவர்களின் பிரதேசம். அவர்கள் தங்கள் சக்தியைப் பெறும் இடம் இதுதான்” என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அவுஸ்திரேலியா, ஜப்பான், பிரான்ஸ், பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் தங்கள் கப்பல்களை அனுப்பும் திட்டம் தற்போது இல்லை என தெரிவித்துள்ளன.

மேலும், “சீனா தனது எண்ணெயில் 90% ஹார்மோஸ் நீரிணை வழியாக பெறுவதால் சீனாவும் உதவ வேண்டும் என்று நான் நினைக்கிறேன். சீனா இந்த ஆதரவை வழங்கவில்லை என்றால், வருகையை, நாங்கள் தாமதப்படுத்தலாம்” என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ட்ரம்ப் அழைப்பை ஏற்க மறுத்த நாடுகள் - மோசமான எதிர்காலமாக இருக்கும் என எச்சரிக்கை | Trump Warn Nato For Refuse Send War Ships Hormuz

இந்த மாத இறுதியில் ட்ரம்ப் சீனாவிற்கு சென்று பெய்ஜிங்கில் நடைபெறும் உச்சி மாநாட்டில் கலந்த கொள்ள உள்ளதாக திட்டமிடப்பட்டது.

நேட்டோவிற்கு எச்சரிக்கை

மேலும், ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க அமெரிக்க நட்பு நாடுகள் உதவத் தவறினால், நேட்டோ மிகவும் மோசமான எதிர்காலத்தை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், “எங்களிடம் நேட்டோ உள்ளது. நாங்கள் மிகவும் இனிமையாக இருந்திருக்கிறோம். உக்ரைனுடன் நாங்கள் அவர்களுக்கு உதவ வேண்டியதில்லை.

ட்ரம்ப் அழைப்பை ஏற்க மறுத்த நாடுகள் - மோசமான எதிர்காலமாக இருக்கும் என எச்சரிக்கை | Trump Warn Nato For Refuse Send War Ships Hormuz

உக்ரைன் எங்களிடமிருந்து ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் உள்ளது. ஆனால் நாங்கள் அவர்களுக்கு உதவினோம். இப்போது அவர்கள் எங்களுக்கு உதவுகிறார்களா என்று பார்ப்போம்.

ஏனென்றால் நாங்கள் அவர்களுக்காக இருப்போம் என்று நான் நீண்ட காலமாகச் சொல்லி வருகிறேன், ஆனால் அவர்கள் எங்களுக்காக இருக்க மாட்டார்கள். அவர்கள் இருப்பார்கள் என்று எனக்குத் தெரியவில்லை.

எந்த பதிலும் இல்லையென்றால் அல்லது அது எதிர்மறையான பதிலாக இருந்தால் அது நேட்டோவின் எதிர்காலத்திற்கு மிகவும் மோசமாக இருக்கும் என்று நினைக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *