புதிய கடற்படைத் தளபதி ஜனாதிபதி செயலாளரை சந்திப்பு

0 Min Read

இலங்கை கடற்படையின் புதிய கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெனாண்டோ மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (20) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

இலங்கை கடற்படையின் 27ஆவது கடற்படைத் தளபதியாகப் பதவியேற்றமைக்காக, கடற்படைத் தளபதிக்கு ஜனாதிபதியின் செயலாளர் தனது வாழ்த்துகளை இதன்போது தெரிவித்தார்.

இந்த உத்தியோகபூர்வ சந்திப்பைக் குறிக்கும் வகையில், கடற்படைத் தளபதியினால் ஜனாதிபதியின் செயலாளருக்கு நினைவுப் பரிசொன்றும் வழங்கப்பட்டது.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *