மத்தல ஸ்ரீ அங்கீரச சர்வதேச பௌத்த மத்திய நிலையத்தில் நடைபெறவுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பொசன் பௌத்த மதநெறி விழாவில் பங்கெடுப்பதற்காக, தாய்லாந்து நாட்டிலிருந்து 32 பேர் அடங்கிய விசேட பௌத்த தூதுக்குழுவினர் இன்று (26) காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
இந்த விசேட தூதுக்குழுவில் சாதாரண பக்தர்கள் மட்டுமன்றி, தாய்லாந்து மன்னரின் முதன்மை ஆலோசகர் ஒருவர், அந்நாட்டின் முன்னணி காப்புறுதி மற்றும் பழ உற்பத்தி நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் தாய்லாந்து வர்த்தக அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட பல முக்கிய அரச மற்றும் வர்த்தக பிரமுகர்களும் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
நாளை (27) முதல் தொடர்ந்து 7 நாட்களுக்கு மத்தல ஸ்ரீ அங்கீரச சர்வதேச பௌத்த மத்திய நிலையத்தில் நடைபெறவுள்ள பொசன் விழா மற்றும் அங்கு புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள சைத்தியத்தில் புனித தாதுக்கள் நிழற்படுத்தும் (ධාතු නිදන් කිරීමේ) மகா உத்சவம் ஆகியவற்றில் இவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
இவ் வழிபாட்டு நிகழ்வுகளுக்காக தாய்லாந்திலிருந்து விசேட தாதுக்கரண்டகம், பல்வேறு வழிபாட்டுப் பொருட்கள் மற்றும் பெருமளவிலான வரலாற்றுத் தியாகப் பரிசில்களையும் இக்குழுவினர் இலங்கைக்கு எடுத்து வந்துள்ளனர்.
தாய்லாந்தின் பெங்கொக் நகரிலிருந்து புறப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான UL-403 என்ற விமானம் மூலம் இன்று காலை 09.10 மணியளவில் இக்குழுவினர் கட்டுநாயக்கவை வந்தடைந்தனர்.
விமான நிலையத்தை வந்தடைந்த இத்தூதுக்குழுவினரை வரவேற்பதற்காக நெல்லிகல சர்வதேச பௌத்த மத்திய நிலையத்தின் தேரர், பௌத்தப் பெருமக்கள் மற்றும் இலங்கையில் வசிக்கும் தாய்லாந்து நாட்டுப் பிரஜைகள் எனப் பலரும் வருகை தந்து அமோக வரவேற்பளித்தனர்.




