India- Europe Trade Deal பாகிஸ்தானுக்கு பேரிடியாக இருப்பது ஏன்?

2 Min Read

ஏற்கனவே ஐரோப்பிய ஒன்றியத்துடன் சிறப்பு வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ள பாகிஸ்தான், தற்போது இந்தியாவும் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதால் கடும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது.

நலன்களுக்கு வேட்டுவைக்கும்

பாகிஸ்தான் தனது அண்டை நாட்டிற்கும் உலகின் மிகப்பெரிய பொருளாதாரக் கூட்டமைப்பிற்கும் இடையிலான இந்த புதிதாக வலுப்பெற்ற வர்த்தக உறவுகளை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவே கூறுகிறது.

India- Europe Trade Deal பாகிஸ்தானுக்கு பேரிடியாக இருப்பது ஏன்? | Pakistan Upset Over India Eu Deal

ஆனால், ஏற்றுமதியாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் எச்சரித்தபடி, இந்தியா தரப்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த ஒப்பந்தமானது பாகிஸ்தானின் இரண்டாவது பெரிய ஏற்றுமதி சந்தையில் குறைந்த போட்டித்தன்மையை ஏற்படுத்தும் என்றே தெரிய வந்துள்ளது.

அதாவது, இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தில் வரி இல்லாத அணுகலைப் பெறுவது போன்ற இந்த ஒப்பந்தத்தின் நன்மைகள், ஐரோப்பிய ஒன்றியத்தின் GSP+ திட்டத்தின் கீழ் பாகிஸ்தானின் நீண்டகால நலன்களுக்கு வேட்டுவைக்கும் என்றே கூறப்படுகிறது.

இருப்பினும், இந்தியாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தத்தால் தனது ஏற்றுமதியில் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாமல் தடுக்க, ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளுடன் நெருக்கமாக தொடர்பில் இருப்பதாகவும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் வெளிவிவகார அலுவலக செய்தித் தொடர்பாளர் தாஹிர் அந்த்ராபி தெரிவிக்கையில், இந்தியாவின் இந்த ஒப்பந்தம் பற்றி எங்களுக்குத் தெரியும். அறிக்கைகள் மற்றும் அதன் உள்ளடக்கத்தைப் பார்த்தோம் என குறிப்பிட்டுள்ளார்.

அதிக வாய்ப்புகளை

அத்துடன், பாகிஸ்தான் ஐரோப்பிய ஒன்றியத்துடன் நீண்டகால, நட்பு மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் உறவுகளைப் பேணுகிறது. மட்டுமின்றி, பாகிஸ்தானுக்கான GSP Plus திட்டம் இருதரப்பு ஒத்துழைப்புக்கு ஒரு வெற்றி வார்ப்புருவாக நிரூபிக்கப்பட்டுள்ளது என அந்த்ராபி குறிப்பிட்டுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் GSP Plus திட்டமானது பாகிஸ்தானுக்கு ஐரோப்பிய சந்தைகளுக்கு வரி இல்லாத அல்லது குறைக்கப்பட்ட வரி அணுகலை வழங்குகிறது.

India- Europe Trade Deal பாகிஸ்தானுக்கு பேரிடியாக இருப்பது ஏன்? | Pakistan Upset Over India Eu Deal

அதேவேளை, ஐரோப்பிய ஒன்றியத்துடனான தடையற்ற வர்த்தகம் மூலம் அதிக வாய்ப்புகளை இந்தியா ஈர்க்கக்கூடும். இதனால், இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய ஒப்பந்தம் பாகிஸ்தானின் நீண்டகால வரி ஆதாயங்களைப் பலவீனப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியம் பாகிஸ்தானின் மிகப்பெரிய ஏற்றுமதி சந்தையாகத் தொடரும் நிலையில், GSP+ திட்டம் அடுத்த ஆண்டு டிசம்பரில் காலாவதியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *