ரூ. 2 கோடி கொள்ளை; சாந்த பண்டாரவின் மகன் கைது

1 View
0 Min Read

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாராவின் மகன் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரூ. 20 மில்லியன் பணத்தை கொள்ளையிட்டதாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் சீன நாட்டவர் ஒருவரிடமிருந்து ரூ. 2 கோடி பணத்தை இவ்வாறு கொள்ளையிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகநபரை கொழும்பு கோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *