பைக்கோனூர் விண்வெளி ஏவுதளத்தின் 31வது தளத்தில் இருந்து, ரஷ்யா ஒரு ரொக்கெட்டை ஏவியுள்ளது என தெரிய வந்துள்ளது.
மனிதர்களை அனுப்பும் பயணங்களுக்காக
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு மனிதர்களை அனுப்பும் பயணங்களுக்காக, ரஷ்யாவில் செயல்பட்டு வந்த ஒரே ஏவுதளம் பைக்கோனூர் விண்வெளி ஏவுதளத்தின் 31வது தளம் ஆகும்.

கடந்த ஆண்டு நவம்பரில், இங்கிருந்து சோயுஸ் MS-28 ரொக்கெட் ஏவப்பட்டபோது ஏவுதளத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.
இதன் காரணமாக ரஷ்யாவினால் விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்ப முடியாமல் தாற்காலிகமாக தடைபட்டது.
இந்த நிலையில், ஞாயிற்றுகிழமை ஆளில்லா புரோகிரெஸ் MS-33 சரக்கு விண்கலத்தை ISS-க்கு, 31ஆம் தளத்தில் இருந்து ரஷ்யா ஏவும் காணொளி வெளியாகியுள்ளது.
ரோஸ்கோஸ்மோஸ் விண்வெளி நிறுவனம்
ரஷ்யாவின் ரோஸ்கோஸ்மோஸ் விண்வெளி நிறுவனம் வெளியிட்ட காணொளி மூலம் இது தெரிய வந்துள்ளது.
அந்த காணொளியில், “பயணம் இயல்பாக உள்ளது” என்று ரஷ்யாவின் ரோஸ்கோஸ்மோஸ் விண்வெளி நிறுவனத்தின் வர்ணனையாளர் ஒருவர் கூறினார்.
பைக்கோனூர் விண்வெளி ஏவுதளம் கஜகஸ்தானில் அமைந்துள்ளது. ஆனால், குறைந்தது 2050 வரை நீடிக்கும் ஒரு குத்தகை ஒப்பந்தத்தின் கீழ் ரஷ்யாவால் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.





