புஜி மலையில் 7 வயது மகனை தனியாக விட்டுச் சென்ற தந்தைக்கு எச்சரிக்கை

1 Min Read

Japan dad leaves son alone on Mount Fuji outrage: ஜப்பானின் புகழ்பெற்ற ஃபுஜி மலையில் நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டு மகன்களுடன்

48 வயதான ஒரு தந்தை, தனது இரண்டு மகன்களுடன் மவுண்ட் ஃபூஜி மலையை ஏறிச் சென்றார்.

நடுவழியில், 7 வயது சிறுவன் சோர்வடைந்ததாக கூறியபோது, தந்தை அவரை மலையின் 2,490 மீட்டர் உயரத்தில் உள்ள ஆறாவது நிலையத்தில் தனியாக விட்டுவிட்டு, மூத்த மகனுடன் உச்சியை நோக்கி ஏறிச் சென்றார்.

Japan dad leaves son alone on Mount Fuji outrage

இந்த சம்பவம் காலை 7.30 மணியளவில் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறுவன் தனியாக அமர்ந்திருந்ததை ஒரு மலை குடிசை பணியாளர் கவனித்துள்ளார்.

மழை பெய்யத் தொடங்கியதால் சிறுவனை உள்ளே அழைத்து பாதுகாப்பாக பார்த்துக்கொண்டார். பின்னர், பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

 

தவறை ஒப்புக்கொண்ட தந்தை

அதிகாரிகள் தந்தையை தொடர்புகொண்டு, குழந்தையை தனியாக விடுவது “ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று எச்சரிக்கை வழங்கினர்.

தந்தை தனது செயலை “அவசர முடிவு” எனக் கூறி, தனது தவறை ஒப்புக்கொண்டு வருத்தம் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் ஜப்பானிய சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பலர் தந்தையின் செயலை பொறுப்பற்ற செயல் என்றும் அதிர்ச்சிகரமான செயல் என்றும் விமர்சித்துள்ளனர்.

 

அதிகாரிகள், மலையேற்றம் செய்யும் போது குழுவில் உள்ளவர்களின் உடல் நிலை மற்றும் சக்தியை கருத்தில் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர். குறிப்பாக, குழந்தைகள் உடன் இருப்பின், அவர்களின் திறனைப் பொருத்து பயணத்தை திட்டமிட வேண்டும் என்றும், ஒருவரையும் தனியாக விடக்கூடாது என்றும் தெரிவித்துள்ளனர்.

மவுண்ட் ஃபூஜி மலையில் வானிலை திடீரென மாறக்கூடியது. மழை, பனி, பனிமூட்டம் போன்றவை பார்வையை குறைத்து ஆபத்துகளை அதிகரிக்கக்கூடும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *