மட்/மமே/ பன்சேனைபாரி வித்தியாலயத்தை சேர்ந்த மாணவிகள் காற்பந்து போட்டியில் மீண்டும் சாதனை!

Karan
By
Karan
1 Min Read

இவ்வருடம் இடம் பெற்ற மாகாணமட்ட பெண்களுக்கான காற்பந்து போட்டியில் மீண்டும் சாதனை படைத்த மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தை சேர்ந்த மட்/மமே/ பன்சேனைபாரி வித்தியாலயத்தை சேர்ந்த மாணவிகள். 20 வயதுப்பிரிவில் 1ம் இடமும்,
மேலும் 17 வயதுப்பிரிவில் 3ம் இடமும் பெற்று தேசிய மட்டத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவ்வெற்றிக்கு மட்/ மேற்கு உடற்கல்வி ஆ.ஆலோசகர் அரியதாஸ் ஆசிரியர், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் (ரவீந்தினி), மற்றும் வலய சக பயிற்றுவிப்பாளர்கள், பெற்றார்களுக்கும் பங்களிப்பு செலுத்தித்துள்ளனர். கடந்த 2022 ஆண்டு 17வயதுபிரிவில் 2 இடமும்,
2023 ஆண்டு 17வயது பிரிவில்1ம் இடமும்,
2024 ஆண்டு 17வயது பிரிவில் 1ம் இடமும்,
2025 ஆண்டு 17வயது பிரிவில் 1ம் இடமும் 20வயது பிரிவில் 3ம் இடமும் பெற்று தமக்கான ஓர் இடத்தை மாகாணத்தில் தக்க வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *