கப்பல் பயணிகள் மொத்தம்… ஹன்டா வைரஸ் பரவல் தொடர்பில் எச்சரிக்கும் EU சுகாதார முகமை

1 Min Read

மரணத்தை ஏற்படுத்தக் கூடிய ஹன்டா வைரஸ் பரவலால் பாதிக்கப்பட்ட சொகுசுக் கப்பலில் உள்ள அனைத்துப் பயணிகளும், அதிக ஆபத்துள்ள தொடர்பாளர்களாகக் கருதப்படுவதாக ஐரோப்பிய ஒன்றிய சுகாதார முகமை எச்சரித்துள்ளது.

திருப்பி அனுப்பப்படுவார்கள்

தொடர்புடையக் கப்பலானது ஸ்பெயின் நாட்டின் டெனெரிஃப் தீவுக்கு அருகே ஞாயிற்றுக்கிழமை நங்கூரமிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அறிகுறிகள் இல்லாத பயணிகள், வழக்கமான வணிக விமானங்கள் மூலமாக அல்லாமல், அவர்களுடைய நாடுகளால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்புப் போக்குவரத்து மூலம் சுய தனிமைப்படுத்தலுக்காகத் திருப்பி அனுப்பப்படுவார்கள்.

நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டிற்கான ஐரோப்பிய மையம், தனது விரைவு அறிவியல் ஆலோசனையின் ஒரு பகுதியாக சனிக்கிழமையன்று இதை தெரிவித்துள்ளது.

ஜிஎம்டி நேரப்படி காலை 0630-0700 மணியளவில், எம்வி ஹோண்டியஸ் கப்பலில் இருந்து தங்கள் குடிமக்களை வெளியேற்ற நாடுகள் தயாராகி வருகின்றன.

உயிரிழந்த மூவர் உட்பட எட்டு பேர் நோய்வாய்ப்பட்டுள்ளனர். எட்டு பேரில் ஆறு பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் இருவருக்கு தொற்று இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

தனிமைப்படுத்தப்படலாம்

அறிகுறியுள்ள பயணிகள் வந்தடைந்தவுடன், அவர்களுக்கு மருத்துவ மதிப்பீடு மற்றும் பரிசோதனையில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும், அவர்களின் உடல்நிலையைப் பொறுத்து அவர்கள் டெனரிஃபில் தனிமைப்படுத்தப்படலாம் அல்லது மருத்துவ ரீதியாக சொந்த நாட்டிற்கு அழைத்துச் செல்லப்படலாம் என்றும் சுகாதார முகமை வலியுறுத்தியுள்ளது.

பொதுவாக இந்த வைரஸ் கொறித்துண்ணிகள் மூலம் பரவுகிறது, ஆனால் அரிதான சந்தர்ப்பங்களில் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கும் பரவக்கூடும். வைரஸ் பரவுவதற்கான ஆபத்து குறைவு என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *