4 நாட்கள், 4 படகுகள்: போதைப்பொருள் கடத்தல் படகுகள் மீது அமெரிக்கா தாக்குதல்

1 Min Read

போதைப்பொருள் கடத்தல் படகுகளை குறிவைத்து அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் 4 படகுகள் மூழ்கடிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் கடத்தல் படகுகள் மூழ்கடிப்பு

பசிபிக் கடல் பிராந்தியம் வழியாக அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக போதைப்பொருட்கள் கடத்தப்பட்டு வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடந்த ஆண்டு மிகப்பெரிய குற்றச்சாட்டை முன்வைத்தார்.

மேலும் போதைப்பொருள் கடத்தலை தடுத்து நிறுத்த கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்து இருந்தார்.

அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்க ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் பசிபிக் கடல் பிராந்தியத்தில் மிகப்பெரிய அளவில் அமெரிக்க கடற்படை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.

4 நாட்கள், 4 படகுகள்: போதைப்பொருள் கடத்தல் படகுகள் மீது அமெரிக்கா தாக்குதல் | Us Strike On 4 Drug Boat In Pacific 4 Dead

புதிய நடவடிக்கையின் கீழ், பசிபிக் பிராந்தியம் வழியாக போதைப்பொருள் கடத்தி வரும் படகுகள் சந்தேகத்திற்குரிய படகுகளை குறிவைத்து அமெரிக்க கடற்படை தாக்கி அழித்து வருகிறது.

கடந்த ஜனவரி 21ம் திகதி வரை மட்டும் சுமார் 36 படகுகள் அழிக்கப்பட்டுள்ளது.

மூழ்கடிக்கப்பட்ட படகுகள்

கடந்த சனிக்கிழமை மேலும் 2 போதைப்பொருள் கடத்தல் படகுகளை அமெரிக்கா தாக்கி அழித்துள்ளது.

மேலும் கடந்த திங்கட்கிழமை ஒன்றும், நேற்று ஒரு படகையும் அமெரிக்க கடற்படை அழித்துள்ளது.

அத்துடன் இந்த 4 படகுகளில் இருந்த 4 பேரும் கொல்லப்பட்டுள்ளனர், தகவல்களின்படி இதுவரை கிட்டத்தட்ட 175 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஈரான் போர் காரணமாக மத்திய கிழக்கில் அமெரிக்க படைகள் குவிக்கப்பட்டு இருந்தாலும், போதைப்பொருள் கடத்தல் தடுப்பு நடவடிக்கையும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *