இந்தோனேசியா, இந்தியாவிடமிருந்து Brahmos ஏவுகணையை வாங்கும் ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளது.
பிலிப்பைன்ஸுக்கு அடுத்தபடியாக Brahmos ஏவுகணையை வாங்கியா இரண்டாவது நாடு என்ற பெருமையை இந்தோனேசியா பெற்றுள்ளது.
இது இந்தியாவின் Make In India முயற்சியின் கீழ் பாதுகாப்பது ஏற்றுமதியில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
இந்தோனேசியா, முதற்கட்டமாக ஒரு கடற்கரை பாதுகாப்பு பேட்டரி வாங்க உள்ளது. அதிகாரபூர்வ ஒப்பந்தம் அடுத்த சில மாதங்களில் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது எங்கள் கடற்படை பாதுகாப்பை வலுப்படுத்தும், இராணுவ உபகரணங்களை நவீனப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதி என இந்தோனேசிய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ரிகோ ரிக்கார்டோ சிரைட் தெரிவித்துள்ளார்.
Brahmos ஏவுகணை இந்தியாவின் DRDO மற்றும் ரஷ்யாவின் NPOM இணைந்து உருவாக்கியது. இது Brahmos Aerospace Pvt Ltd என்ற இந்திய-ரஷ்ய கூட்டு நிறுவனத்தில் தயாரிக்கப்படுகிறது.
இந்த ஏவுகணை Mach 2.8 வேகத்தில் (ஒளியின் வேகத்தை விட 3 மடங்கு) பறக்கிறது. இது கப்பல்கள், நீர்முழ்கிக் கப்பல்கள், விமானங்கள், நில அடிப்படையிலான தளங்கள் ஆகியவற்றிலிருந்து ஏவப்படக்கூடியது. கப்பல் எதிர்ப்பு (Anti-ship) மற்றும் நிலத் தாக்குதல் (land-Attack) ஆகிய இருவகை பணிகளையும் செய்யும் திறன் கொண்டது.
இந்திய ஆயுதப்படையின் மூன்று பிரிவுகளிலும் Brahmos ஏவுகணை பயன்படுத்தப்படுகிறது. 2001-ஆம் ஆண்டு முதல் சோதனை நடத்தப்பட்டு, தற்போது Su-30 MKI போர் விமானங்கள், கடற்படை கப்பல்கள் மற்றும் நில அடிப்படையிலான லாஞ்சர்களில் பயன்படுத்தப்படுகிறது.
2029-30-க்குள் ரூ.50,000 கோடி மதிப்பிலான பாதுகாப்பு ஏற்றுமதியை சாதிப்பதே இந்தியாவின் இலக்காகும்.




