இந்தோனேசியாவின் ஆசே மாகாணத்தில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தின் மையம் கடலுக்குள் 13 கிலோமீற்றர் ஆழத்தில் இருந்ததாக அந்நாட்டின் புவியியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்படும் அபாயம் இல்லை என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மக்கள் பாதுகாப்பாக உள்ளனர் என்றும், உடனடி சேதம் குறித்த தகவல்கள் எதுவும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசே மாகாணம், 2004-ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரழிவு காரணமாக உலகளவில் நினைவுகூரப்படும் பகுதி என்பதால் இங்கு நிகழும் ஒவ்வொரு நிலநடுக்கமும் மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்துகிறது.
இருப்பினும் இம்முறை நிலநடுக்கம் பாரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்பது மக்களுக்கு நிம்மதி அளிக்கும் செய்தியாக இருக்கிறது.
இந்தோனேசியா, பசிபிக்கின் Ring Of Fire பகுதியில் அமைந்துள்ளதால் அடிக்கடி நிலநடுக்கங்கள் மற்றும் எரிமலை வெடிப்புகள் நிகழ்வது இயல்பானது.




