அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து நடத்தும் தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி உயிரிழந்த இரண்டு நாட்களுக்கு பின்னர், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டை வெளியிட்டுள்ளார்.
2024-ஆம் ஆண்டு கமேனி தன்னை கொல்ல இரண்டு முறை முயற்சி செய்ததாகவும், “அவர் என்னை கொல்ல முனைந்தார், ஆனால் அதற்கு முன்னதாகவே நான் அவரை முடித்துவிட்டேன்” எனவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ABC News-க்கு அளித்த பேட்டியில் ட்ரம்ப் இதனை தெரிவித்துள்ளார்.
இந்த கொலை முயற்சிகள் 2024-இல் நடந்ததாக அமெரிக்க உளவுத்துறை தெரிவித்ததை குறிப்பிட்டு, அவர் இதனை தெரிவித்துள்ளார்.

2024-இல், பென்சில்வேனியாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் ட்ரம்ப் காதில் சுட்டுக் காயமடைந்தார். பின்னர், புளோரிடாவில் அவர் விளையாடிய கால்பந்து மைதானத்தில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இதற்குப் பின்னர், ஈரான் புரட்சிகர காவல்படையுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ஆப்கான் நாட்டு நபர் ஃபர்ஹாத் ஷாகெரி மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
ட்ரம்ப் தனது Truth Social பக்கத்தில், “கமேனி உலகின் மிகக் கொடிய மனிதர்களில் ஒருவர். அவர் மற்றும் அவரது குழுவால் பல நாடுகளில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். இப்போது ஈரான் மக்களுக்கு தங்கள் நாட்டை மீண்டும் கைப்பற்ற மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.
அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டு தாக்குதலுக்குப் பிறகு, ஈரான் அரசியல் நிலைமை பெரும் அதிர்ச்சியில் உள்ளது. ட்ரம்ப், ஈரான் மக்களை எழுச்சிகொண்டு ஆட்சியை கவிழ்க்குமாறு அழைப்பு விடுத்துள்ளார்.




