மத்திய கிழக்கு நாடுகளில் ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் அபுதாபியில் ஒருவரும், இராக்கில் இருவரும் உயிரிழந்துள்ளனர்.
ஈரான் தாக்குதல்
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான அணுசக்தி பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ள நிலையில், ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது.

இதற்கு பதிலடியாக ஈரான் இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்காவின் ராணுவ நிலைகள் மீது இரான் ஏவுகணைகளை வீசி வருகிறது.
மத்திய கிழக்கின் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படை தளத்தில் ஏவுகணைகள் விழுந்ததில் கரும்புகை எழுந்துள்ளது. மேலும், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், ஜோர்டான், ஈராக் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்களை குறி வைத்தும் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதில், பல ஏவுகணைகளை அந்த நாடுகளின் வான் பாதுகாப்பு அமைப்புகள் வானிலே தடுத்து தாக்கி அழித்து வருகிறது.
உயிரிழப்பு
ஈராக்கின் பாபில் மாகாணத்தில் உள்ள ஜுர்ஃப் அல்-நஸ்ர் பகுதியை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 3 பேர் காயமடைந்ததாக ஈராக் இராணுவம் தெரிவித்துள்ளது.

மேலும், அபுதாபியில் ஏவுகணையை வானிலே தாக்கியளித்துள்ள நிலையில், ஏவுகணை குப்பை விழுந்து குடிமக்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தத் தாக்குதலை அமைச்சகம் கடுமையாகக் கண்டித்துள்ளதோடு, பொதுமக்கள், பொருள்கள், வசதிகள் மற்றும் தேசிய நிறுவனங்களை குறிவைப்பதை ஐக்கிய அரபு அமீரகம் திட்டவட்டமாக நிராகரித்ததை உறுதிப்படுத்தியது.
இலக்கு வைப்பது தேசிய இறையாண்மை மற்றும் சர்வதேச சட்டத்தின் அப்பட்டமான மீறலைக் குறிக்கிறது என்றும், இந்த தாக்குதல் வெடிப்புக்கு பதிலளிக்கவும், அதன் பிரதேசம், குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களைப் பாதுகாக்கவும், அதன் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையைப் பாதுகாக்கவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க ஐக்கிய அரபு அமீரகத்திற்கு முழு உரிமை உள்ளது.
எந்தவொரு அச்சுறுத்தல்களையும் சமாளிக்க முழு தயார்நிலையையும் அமைச்சகம் உறுதிப்படுத்தியது, நாட்டின் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் எந்தவொரு முயற்சியையும் உறுதியாக எதிர்கொள்ள தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும், குடிமக்கள், குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களின் பாதுகாப்பு ஒரு முதன்மையான முன்னுரிமையாக உள்ளது, அதை சமரசம் செய்ய முடியாது என்றும் தெரிவித்துள்ளது.




