இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ஈரானின் தலைநகர் தேஹ்ரானில் ஏவுகணை தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, ஈரான் தனது வான்வெளியை முழுமையாக மூடியுள்ளது.
இதனால் பல சர்வதேச விமானங்கள் அவசரமாக வழிமாற்றம் செய்யப்பட்டன.
அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதல்கள், ஈரான் உச்சத் தலைவர் ஆயத்துல்லா அலி காமெனெயின் அலுவலகம் அருகே நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர் அப்போது அங்கு இருந்தாரா என்பது தெளிவாகவில்லை. இஸ்ரேல் பாதுகாப்பு அதிகாரிகள், “இந்த தாக்குதல் பல மாதங்களாக திட்டமிடப்பட்டது” என தெரிவித்துள்ளனர்.
தற்போது உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. ஆனால், டெல் அவிவில் எச்சரிக்கை சைரன்கள் ஒலிக்கப்பட்டு, இஸ்ரேல் தனது வான்வெளியையும் மூடியுள்ளது.

இந்த தாக்குதல், மேற்கு ஆசியாவில் புதிய இராணுவ மோதலை தூண்டியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், சமீபத்திய பேச்சுவார்த்தைகள் குறித்து “திருப்தியில்லை” எனக் கூறியிருந்தாலும், இன்னும் சிறிது நேரம் கொடுத்து, போரை தவிர்க்க முயற்சி செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதல், பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரித்து, உலகளாவிய விமானப் போக்குவரத்தையும் பாதித்துள்ளது.



