ரஷ்யா, உக்ரைனின் எல்லை பகுதிகளில் தாக்குதல் நடத்தியபோது, அதன் ட்ரோன்கள் ருமேனியாவின் வான்வெளியை மீறியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால் ருமேனியா தொடர்ந்து இரண்டாவது நாளாக தனது போர் விமானங்களை அவசரமாக அனுப்பியுள்ளது.
ருமேனிய பாதுகாப்பு அமைச்சகம், “ரஷ்ய ட்ரோன்கள் டான்யூப் கடல் வழியாக உக்ரைனின் துறைமுகங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியபோது, அவை எங்கள் வான்வெளிக்குள் நுழைந்தன” என தெரிவித்துள்ளது.
இதனால் நேட்டோ பிராந்தியத்தில் போர் பரவக்கூடும் என்ற அச்சம் அதிகரித்துள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் பலமுறை ருமேனிய மண்ணில் ட்ரோன் பாகங்கள் விழுந்துள்ளன. இதனால் எல்லை பகுதிகளில் விமானத் தாக்குதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டு, மக்கள் தற்காலிகமாக வெளியேற்றப்பட்டனர்.
புக்கரெஸ்ட் அரசு, “இது எங்கள் இறையாண்மையை மீறுகிறது” எனக் கண்டனம் தெரிவித்துள்ளது.
ருமேனியா தனது கிழக்கு எல்லையில் கூடுதல் வான் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, ரோந்துப் பணிகளை அதிகரித்துள்ளது. நேட்டோவும் வான்வழி கண்காணிப்பை வலுப்படுத்தியுள்ளது.




