உக்ரைனின் பல்வேறு பகுதிகளை குறிவைத்த ரஷ்யா: இரவோடு இரவாக நடத்திய வான்வழித் தாக்குதல்

1 Min Read

இரவோடு இரவாக உக்ரைனிய நகரங்களை குறிவைத்து ட்ரோன்கள் மற்றும் ராக்கெட் தாக்குதல்களை ரஷ்யா முன்னெடுத்துள்ளது.

ரஷ்யா தாக்குதல்

நேற்றிரவு ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது ரஷ்யா ஒருங்கிணைந்த வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளன.

இதில் கிட்டத்தட்ட 20 பொதுமக்கள் வரை படுகாயமடைந்த தோடு, பல குடியிருப்பு கட்டிடங்கள் சேதமடைந்து இருப்பதாக வியாழக்கிழமை உள்ளூர் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

உக்ரைனின் பல்வேறு பகுதிகளை குறிவைத்த ரஷ்யா: இரவோடு இரவாக நடத்திய வான்வழித் தாக்குதல் | Russia Overnight Attack On Ukraine Missiles Used

தலைநகர் கீவ், கார்கிவ் மற்றும் தெற்கு பகுதியான ஜாப்போரிஜியா ஆகிய நகரங்களை குறிவைத்து இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

ரஷ்யாவின் இந்த தாக்குதலில் மோசமாக பாதிப்படைந்த கார்கிவ் மற்றும் ஜாப்போரிஜியாவில் 7 வயது சிறுவன் உட்பட 14 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த நகரங்களை குறிவைத்து கிட்டத்தட்ட 2 ஏவுகணைகளும், 17 ட்ரோன்களையும் ரஷ்யா ஏவியுள்ளது.

ஜாப்போரிஜியா பகுதியில் ஏவுகணை தாக்கியதில் 19 மாடி கட்டிடம் சேதமடைந்துள்ளது. கிட்டத்தட்ட 500 வீடுகளில் வெப்பமூட்டும் வசதிகள் துண்டிக்கப்பட்டுள்ளது.

உக்ரைனின் பல்வேறு பகுதிகளை குறிவைத்த ரஷ்யா: இரவோடு இரவாக நடத்திய வான்வழித் தாக்குதல் | Russia Overnight Attack On Ukraine Missiles Used

தலைநகர் கீவ்வை குறிவைத்த ட்ரோன்களை உக்ரைன் வான் பாதுகாப்பு படை வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தியுள்ளது.

கடந்த சில நாட்களாக ரஷ்யாவின் தாக்குதல்கள் உக்ரைனின் மின்சார கட்டமைப்புகளை குறிவைத்த தாக்குதல்களாக இருப்பதாக உள்ளது.

உக்ரைனின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் துணை மின் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்துவதன் மூலம் ஒட்டுமொத்த பிராந்தியத்தையும் இருளில் மூழ்கடிக்க ரஷ்யா திட்டமிட்டு இந்த தாக்குதல்களை நடத்தி வருகிறது.

போர் தாக்குதல்கள் காரணமாக உக்ரைனின் பெரும்பாலான பகுதிகளில் தகர்க்கப்பட்ட கடைவீதிகள், துளைகளுடன் காணப்படும் அடுக்கு மாடி குடியிருப்புகள் மற்றும் சிதைந்த கட்டிடங்கள் என கவலைக்கிடமான நிலை நீடித்து வருகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *