இளவரசர் ஆண்ட்ரூ கைது குறித்து பக்கிங்காம் அரண்மனை வட்டாரத்துக்கு முன்கூட்டியே தகவல் கொடுக்கப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
உண்மை அறிந்த ஒரே நபர்
உண்மையில், ஆண்ட்ரூ கைது குறித்து மன்னர் சார்லசுக்குக்கூட முன்கூட்டியே தகவல் கொடுக்கப்படவில்லையாம்.

அரசாங்கத்திலேயே ஒரே ஒரு நபருக்கு மட்டும்தான் ஆண்ட்ரூ கைது குறித்து தகவல் கொடுக்கப்பட்டதாம்.
அந்த ஒரே அலுவலர், பிரித்தானிய உள்துறைச் செயலரான ஷபானா மஹ்மூத்!
முன்னாள் இளவரசராகவே இருந்தாலும், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று காட்டுவதற்காகவே தேம்ஸ் பள்ளத்தாக்கு பொலிசார் பக்கிங்காம் அரண்மனைக்கு முன்கூட்டியே தகவல் கொடுக்கவில்லையாம்.

அதே நேரத்தில், ஆண்ட்ரூ கைது குறித்து ஊடகங்களுக்கு தகவல் கொடுப்பதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன், தாங்கள் ஆண்ட்ரூவை கைது செய்து பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்வதாக பக்கிங்காம் அரண்மனைக்கு அதிகாரிகள் தகவல் கொடுத்தார்களாம்.




