அமெரிக்கா, மேற்கு ஆசியாவில் மிகப்பெரிய பலநாள் விமானப்படை இராணுவ பயிற்சியை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த பயிற்சி, “போர்திறனை விரைவாகப் பரப்பி, நீண்டகாலம் நிலைநிறுத்தும் திறனை” வெளிப்படுத்தும் என US Central Command தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் பிரம்மாண்ட போர் கப்பலான ஆபிரகாம் லிங்கன் கேரியர் தாக்குதல் குழு மேற்கு ஆசியாவுக்கு வந்த ஒரு நாளுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதன் மூலம் அந்தப் பகுதியில் அமெரிக்காவின் இராணுவ சக்தி பெரிதும் அதிகரித்துள்ளது.

அமெரிக்கா-இரான் உறவுகள் தற்போது கடுமையான பதற்றத்தில் உள்ளன. காரணம், ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டங்களை அடக்குவதில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்ததாக மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.
ஒரு அமெரிக்க அமைப்பு, ஜனவரி 27 நிலவரப்படி 6,000-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன என்றும், மேலும் 17,000 உயிரிழப்புகள் குறித்து விசாரணை நடைபெறுவதாகவும் கூறியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், “ஈரான் போராட்டக்காரர்களை கொன்றால், அமெரிக்கா இராணுவமாக தலையிடும்” என எச்சரித்திருந்தார். ஆனால் சமீபத்தில், ஈரான் 800-க்கும் மேற்பட்ட தூக்குத் தண்டனைகளை நிறுத்தியதால், தாக்குதல் உத்தரவை அவர் வாபஸ் பெற்றார்.
இந்த பயிற்சியின் துல்லியமான திகதி மற்றும் இடம் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், இது அமெரிக்கா-ஈரான் இடையேயான பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
மேற்கு ஆசியாவில் நடைபெறவுள்ள இந்த இராணுவ நடவடிக்கை, பிராந்திய பாதுகாப்பு மற்றும் உலகளாவிய அரசியல் சூழ்நிலைகளில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.




