‘ஜெமினி’ பயனர் எண்ணிக்கை ஒரு பில்லியனை தாண்டியது

1 Min Read

கூகுள் நிறுவனத்தின் (Gemini ) ‘ஜெமினி’ செயற்கை நுண்ணறிவு மென்பொருளை மாதந்தோறும் பயன்படுத்துவோர் எண்ணிக்கை ஒரு பில்லியனைக் கடந்துள்ளது.

கூகுளின் மிக வேகமாக வளர்ச்சி காணும் மின்னிலக்க மென்பொருள் ஜெமினி என்று நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

கூகுளின் AI பிரிவில் பெரும் மாற்றங்கள் நடக்கும் நேரத்தில் அந்தச் சாதனை இடம்பெற்றுள்ளது.

சில முக்கிய AI ஆய்வாளர்கள் நிறுவனத்திலிருந்து விலகினர். அதே நேரத்தில், அடுத்த கட்ட Gemini 3.5 Pro மென்பொருள் வெளியீடும் தாமதமானது. AI போட்டி தற்போது மிகவும் கடுமையாக உள்ளது.

குறிப்பாக, கணினி நிரல் துறையில் பல நிறுவனங்கள் வேகமாக முன்னேறி வருகின்றன. ஆனால் கூகுளுக்கு பெரிய பலம் அதன் பயனாளர்கள். Search, Gmail, Maps, YouTube ஆகிய அனைத்துச் சேவைகளிலும் Gemini சீராக இணைக்கப்படுகிறது. OpenAI சேவையின் பயனாளர்கள் எண்ணிக்கை ஒரு பில்லியனை எட்டியுள்ளது. 2022ஆம் ஆண்டு ChatGPT நிறுவனம் அதன் இலவச AI மென்பொருளை வெளியிட்டது. அதைத் தொடர்ந்து அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களுக்கு இடையே பயனாளர்களை வசப்படுத்துவதில் கடும் போட்டி நிலவுகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *