இரட்டை சம்பளம்: சுகீஸ்வரவிற்கு ஜூலை 30 வரை விளக்கமறியல் நீடிப்பு!

1 Min Read

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் பதவிக்காலங்களில் ஒரே நேரத்தில் இரண்டு சம்பளம் பெற்றதாக புதிய மக்கள் முன்னணியின் (NJP) தலைவரான சுகீஸ்வர பண்டாரவை ஜூலை 30 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (22) உத்தரவிட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டு ஓய்வுபெற்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் செயலாளர்களில் ஒருவராகப் பணியாற்றிய அதேவேளை, ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியிலும் ஜனாதிபதி செயலகத்தின் திட்டப் பணிப்பாளராக அவர் கடமையாற்றியுள்ளார்.

இவ்வாறு இரண்டு உயர்மட்டப் பதவிகளை ஒரே காலப்பகுதியில் வகித்ததன் மூலம், ஜனாதிபதி செலவுத் தலைப்பின் கீழ் இரண்டு சம்பளங்களை முறையற்ற விதத்தில் பெற்றுக்கொண்டதாக அவர் மீது பாரிய குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

இந்த நிதி மோசடி தொடர்பான வழக்கினை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போதே, அவரைத் தொடர்ந்து விளக்கமறியலில் வைப்பதற்கான கட்டளையை நீதிமன்றம் பிறப்பித்தது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *