வருடாந்தம் ஜூலை மாதத்தில் மேற்கொள்ளப்படும் பஸ் கட்டண திருத்தத்தை இன்று முதல் நடைமுறைப்படுத்த அனுமதி வழங்குமாறு தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
வருடாந்த பஸ் கட்டண திருத்த கொள்கைகளுக்கு இணங்க இம்முறை பஸ் கட்டணம் திருத்தப்பட வேண்டிய விதம் தொடர்பாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாக மேற்படி சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.




