ரஷ்யாவில் ஏரியில் ஹோவர்கிராஃப்ட் சவாரி செய்த 5 சுற்றுலாப் பயணிகள் நீரில் மூழ்கி பலியாகினர்.
பெரிய விமான வகை ஹோவர்கிராஃப்ட்
கிழக்கு சைபீரியாவின் பைக்கால் ஏரியில் 18 சுற்றுலாப் பயணிகள், பெரிய விமான வகை விசிறிகள் பொருத்தப்பட்டிருந்த ஹோவர்கிராஃப்ட்டில் பயணித்தனர்.
திடீரென ஹோவர்கிராஃப்ட் கவிழ்ந்ததில், மாஸ்கோவைச் சேர்ந்த ஐந்து சுற்றுலாப் பயணிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
ரஷ்யாவின் அவசரநிலை அமைச்சகத்தின்படி, ஒரு சிறார் உட்பட 13 பேர் மீட்கப்பட்டனர்.
ஐந்து உடல்களை மீட்டதாக
சைபீரியாவின் புரியாட்டியா குடியரசின் அதிகாரிகள், மீட்புக் குழுக்கள் ஐந்து உடல்களை மீட்டதாக ரியா நோவோஸ்தியிடம் தெரிவித்தனர்.
விபத்து நடந்த நேரத்தில், அந்த வாகனம் அதன் பயணிகளின் கொள்ளளவைத் தாண்டி அதிக சுமையுடன் இருந்ததாக நம்பப்படுகிறது.
உயிரிழப்பை ஏற்படுத்திய பாதுகாப்பு விதிமீறல்கள் குறித்து குற்றவியல் விசாரணையைத் தொடங்கியுள்ளதாக ரஷ்யாவின் உயர்மட்ட புலனாய்வு அமைப்பான புலனாய்வுக் குழு தெரிவித்துள்ளது.




