திடீரென ஆடுகளத்திற்குள் குதித்த ஆயிரக்கணக்கானோர்! தீப்பந்தத்தை எறிந்து..கோல் கீப்பர் மீது தாக்குதல்

1 Min Read

செக் குடியரசில் நடந்த கால்பந்து போட்டியில் ரசிகர்கள் ஆடுகளத்திற்குள் நுழைந்ததால் பதற்றமான சூழல் உருவானது.

கால்பந்து போட்டி

சனிக்கிழமையன்று , செக் குடியரசின் Pragueயில் Slavia Prague மற்றும் Sparta Prague அணிகள் மோதிய கால்பந்து போட்டி பரபரப்பான சூழலில் முடிவை நோக்கி சென்றது.

முன்னிலை வகித்த Slavia Prague அணி, உள்ளூர் போட்டியாளரான Sparta Prague-ஐ 3-2 என்ற கணக்கில் வீழ்த்த 3 நிமிடங்களே மீதமிருந்தது.

அதே சமயம் போட்டியை நடத்தும் அணி வெற்றி பெற்றால், அது பட்டத்தை உறுதி செய்யும்.

அச்சமயம் நூற்றுக்கணக்கான உள்ளூர் ஆதரவாளர்கள் கையில் எரியும் தீப்பந்தங்களுடன் ஆடுகளத்திற்குள் நுழைந்தனர்.

Chaos in prague football match

தாக்கப்பட்ட கோல் கீப்பர்

மற்றவர்கள் எதிரணி ரசிகர் பகுதிக்குச் சென்று அப்பகுதிக்குள் எறிபொருட்களை வீசினர்.

Sparta அணியின் கோல் கீப்பர் ஜேக்கப் சுரோவ்சிக் புல் தரையில் சரிந்து விழுந்து, ஆடுகளத்திற்குள் நுழைந்தவர்களில் ஒருவரால் தான் தாக்கப்பட்டதாகக் கூறினார்.

மேலும், தன்னைத் தாக்குவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், இதனை சட்டரீதியாகத் தொடர்வேன் என்றும் பதிவிட்டார்.

உள்ளூர் அறிக்கைகளின்படி, கோல் கீப்பரின் சக வீரர் மற்றும் கிளப்பின் மருத்துவ ஊழியர் ஒருவரும் தாக்கப்பட்டனர். அசம்பாவிதத்தைத் தொடர்ந்து ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.

மேலும் வருகை தந்த அணி உடனடியாக ஈடன் அரங்கத்தை விட்டு வெளியேறியது. இச்சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

Chaos in prague football match

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *