ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் நடத்திய தாக்குதலை கிரிக்கெட் வீரர் ரஷீத் கான் கண்டித்துள்ளார்.
400 பேர் உயிரிழப்பு
ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் பாகிஸ்தான் நடத்திய 400 பேர் வரை உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுமார் 2000 பேர் சிகிச்சை பெற்று வந்ததாக தகவல் வெளியான நிலையில், ஆப்கானிஸ்தானின் அரசாங்க செய்தித் தொடர்பாளர் இந்த தாக்குதலைக் கண்டித்துள்ளார்.
அதேபோல் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷீத் கான் (Rashid Khan) தனது எக்ஸ் பக்கத்தில் கண்டனத்தையும், கவலையையும் பதிவு செய்துள்ளார்.
போர்க்குற்றம்
அவரது பதிவில், “காபூலில் பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதல்களின் விளைவாக பொதுமக்கள் உயிரிழந்தது குறித்த சமீபத்திய செய்திகளால் நான் மிகுந்த துயரம் அடைகிறேன்.
வேண்டுமென்றோ அல்லது தவறுதலாகவோ, பொதுமக்கள் வசிக்கும் வீடுகள், கல்வி நிறுவனங்கள் அல்லது மருத்துவக் கட்டமைப்புகளைக் குறிவைப்பது ஒரு போர்க்குற்றமாகும்.
மனித உயிர்கள் மீது காட்டப்படும் இந்த அப்பட்டமான அலட்சியம், குறிப்பாக புனித ரமலான் மாதத்தில் அருவருக்கத்தக்கதாகவும், மிகுந்த கவலையளிப்பதாகவும் உள்ளது. இது பிளவுகளையும், வெறுப்பையும் மட்டுமே தூண்டும்.
இந்த சமீபத்திய கொடூரத்தை முழுமையாக விசாரித்து, குற்றவாளிகளைப் பொறுப்பேற்க செய்யுமாறு ஐ.நா மற்றும் பிற மனித உரிமை அமைப்புகளை நான் கேட்டுக் கொள்கிறேன்.
இந்த இக்கட்டான நேரத்தில் எனது ஆப்கானிய மக்களுடன் நான் துணை நிற்கிறேன். நாம் குணமடைவோம், ஒரு தேசமாக எழுவோம். நாம் எப்போதும் அப்படித்தான் செய்கிறோம். இன்ஷா அல்லா!” என கூறியுள்ளார்.





