டெங்கு தடுப்பு: பல்கலைக்கழகங்களுக்கான வழிகாட்டல் இன்று வெளியீடு

0 Min Read

நாட்டிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் டெங்கு நோயைக் கண்காணித்தல் மற்றும் தடுப்பது தொடர்பான மருத்துவ முகாமைத்துவ மற்றும் தரப்படுத்தப்பட்ட வழிகாட்டல் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

அந்தவகையில் பல்கலைக்கழகங்களுக்கான வழிகாட்டல் நெறிமுறைகள் இன்று உத்தியோகபூர்வமாக வெளியிடப்படுமென கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழகங்களில் டெங்கு நோயை முன்கூட்டியே கண்டறிவதற்கும், நோயாளிகளை முறையாகக் கையாள்வதற்கும், நோய் கண்காணிப்பை வலுப்படுத்துவதற்கும், டெங்கு நுளம்புகள் பரவுவதைத் தடுப்பதற்கும் முறையான நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துவதே இதன் நோக்கமாகும். அண்மைக்காலமாக டெங்கு நோய் தீவிரமாகப் பரவியதன் காரணமாக, சில பல்கலைக்கழகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *