ஈரான் மீதான கடல் முற்றுகையை முற்றாக நீக்கியது அமெரிக்கா

1 Min Read

இரு நாடுகளுக்கும் இடையே புதன்கிழமை கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, ஈரான் துறைமுகங்களுக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து புறப்படும் அனைத்து வணிகக் கப்பல் போக்குவரத்தின் மீதான தடைகளையும் அமெரிக்கப் படைகள் உடனடியாக நிறுத்தியுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளையகம் (CENTCOM) எக்ஸ் (X) தளத்தில் உறுதிப்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் நடவடிக்கை: ஈரான் துறைமுகங்கள் மற்றும் கடற்கரைப் பகுதிகளை இலக்கு வைத்து கடந்த இரண்டு மாதங்களாக நடத்தப்பட்டு வந்த அமெரிக்க கடற்படையின் அனைத்து முற்றுகை மற்றும் சோதனைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

ஹோர்முஸ் நீரிணை வழியாக வணிகக் கப்பல்கள் பாதுகாப்பாகவும் விரைவாகவும் பயணிப்பதை உறுதி செய்வதற்காக, ஈரானின் ‘பாரசீக வளைகுடா நீரிணை அதிகாரச் சபை’ விசேட அனுமதிகளை வழங்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

கடல் பகுதியில் கண்ணிவெடிகள் அகற்றப்படும் பணிகள் தொடர்வதால், வணிகக் கப்பல்கள் ஈரானிய அதிகாரச் சபையினால் ஒதுக்கப்படும் பிரத்தியேகப் பாதைகள் மற்றும் நேர அட்டவணைகளை கண்டிப்பாகப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின்படி அடுத்த 60 நாட்களுக்கு ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் வணிகக் கப்பல்களுக்கு எவ்வித கட்டணமும் விதிக்கப்பட மாட்டாது. இருப்பினும், ஒப்பந்த விதிமுறைகள் சரியாகப் பின்பற்றப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க அமெரிக்கக் கடற்படைக் கப்பல்கள் அப்பகுதியில் தொடர்ந்து நிலைநிறுத்தப்படும் என CENTCOM தெரிவித்துள்ளது.

உலகில் பயன்படுத்தப்படும் மசகு எண்ணெயில் சுமார் 20% கடந்து செல்லும் இந்த முக்கியமான கடல்வழிப் பாதை மீண்டும் திறக்கப்பட்டுள்ளதால், உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையும் கணிசமாகக் குறையத் தொடங்கியுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *