காசாவில் 5 வயது சிறுமி கொல்லப்பட்ட விவகாரம்: குற்றவியல் விசாரணைக்கு உத்தரவிட்ட இஸ்ரேல்

1 Min Read

Israel criminal probe into killing 5 years old hind rajab: காசா நகரில் 5 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவியல் விசாரணைக்கு இஸ்ரேலிய ராணுவம் உத்தரவிட்டுள்ளது.

குற்றவியல் விசாரணைக்கு உத்தரவிட்ட இஸ்ரேலிய ராணுவம்

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காசாவில் கொல்லப்பட்ட 5 வயது சிறுமி ஹிந்த் ரஜப் மற்றும் 8 பேரின் மரணம் குறித்து இஸ்ரேலிய ராணுவம் முறையான குற்றவியல் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

பாலஸ்தீன செஞ்சிலுவைச் சங்க ஆம்புலன்ஸ் இயக்கத்தை ஒருங்கிணைப்பதில் ஏற்பட்ட தோல்விகளே இந்த விசாரணை தொடங்குவதற்கான முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

5 வயது சிறுமி ஹிந்த் ரஜப் கொல்லப்பட்டது தொடர்பான இந்த விசாரணை ராணுவக் காவல்துறையின் குற்றவியல் விசாரணைப் பிரிவால் நடத்தப்பட்டுள்ளது.

2024ம் ஆண்டு நடந்த சம்பவம்

கடுமையான மோதல்களுக்கு மத்தியில் காசா நகரின் டெல் அல்-ஹவா(Tel al Hawa) பகுதியில் இருந்து 5 வயது சிறுமி ஹிந்த் மற்றும் ஹமதா குடும்பத்தினர் 6 பேர் தப்பியோட முயன்றனர்.

அப்போது அவர்கள் பயணித்த வாகனம் மீது இஸ்ரேலிய ராணுவம் நேரடி தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக செஞ்சிலுவைச் சங்கம் வெளியிட்ட ஆடியோவில் சிறுமி ஹிந்த்தின் கடைசி நேர பரிதவிப்புகள் இடம்பெற்றுள்ளது.

காசாவில் 5 வயது சிறுமி கொல்லப்பட்ட விவகாரம்: குற்றவியல் விசாரணைக்கு உத்தரவிட்ட இஸ்ரேல் | Israel Criminal Probe Into Killing Hind Rajab

ஹிந்தை காப்பாற்ற யூசப் சீனோ மற்றும் அகமது மத்ஹுன் ஆகிய 2 அவசர ஊர்திப் பணியாளர்கள்  அனுப்பப்பட்டனர். அவர்கள் சம்பவ இடத்தை நெருங்கிய போது பலத்த துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டது. பின்னர் அவர்களுடனான தொடர்பும் துண்டிக்கப்பட்டது.கிட்டத்தட்ட 12 நாட்களுக்கு பிறகு ஹிந்த் மற்றும் அவரது 6 உறவினர்கள் மற்றும் 2 மருத்துவ பணியாளர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *