நைஜீரியாவின் கானோ நகரத்தைச் சேர்ந்த 20 வயது இளைஞர் ஒருவர் பார்வையற்றோர் மற்றும் குறைந்த பார்வையுடையோருக்காக புதிய AI கண்ணாடி ஒன்றை உருவாக்கியுள்ளார்.
இந்த கண்ணாடி, தடைகளை கண்டறிந்து, பயனாளியின் இருப்பிடத்தை கண்காணித்து, அவர்களுடன் பேசும் திறனையும் கொண்டுள்ளது.“இந்த AI கண்ணாடி, சென்சார்கள் மற்றும் GPS தொழில்நுட்பத்தை இணைத்து, பார்வையற்றோர் சுயமாகச் செல்ல உதவும்,” என்றும் முன்னால் உள்ள பொருட்களை கண்டறிந்து எச்சரிக்கை வழங்கும்.எனவும் GPS மூலம் பயனாளியின் இருப்பிடத்தை அறியவும் வழி தவறினால், அவர்களின் இருப்பிடத்தை WhatsApp அல்லது Email மூலம் குடும்பத்தினருக்கு அனுப்பும்.வசதிகளிடனும் AI மற்றும் voice interaction மூலம், சுற்றுப்புறத்தை விளக்கிக் கூறும் திறனுடன் இந்த AI கண்ணாடி உருவாக்கப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில், குறைந்த செலவில் கிடைக்கும் எலக்ட்ரானிக் பொருட்களைப் பயன்படுத்தி prototype உருவாக்கினார்.
பார்வையற்ற ஒருவர் இதைப் பயன்படுத்தி கருத்துக்களை வழங்கியதால், கண்ணாடி வடிவமைப்பில் பல மேம்பாடுகள் செய்யப்பட்டன. முதலில், எச்சரிக்கை ஒலி மட்டுமே வழங்கிய prototype, தற்போது AI, GPS, voice interaction போன்றவை இந்த AI கண்ணாடியில் உள்ளது . இந்த கண்டுபிடிப்பு, பார்வையற்றோரின் வாழ்க்கையை எளிதாக்கும் முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.




