பிரம்மோஸ் ஏவுகணைகளை வியட்நாமுக்கு வழங்க ஒப்பந்தம்

1 Min Read

பிரம்மோஸ் சுப்பர்சொனிக் குரூஸ் ஏவுகணைகளை வியட்நாமுக்கு ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. இதேபொன்றதொரு ஒப்பந்தம் இந்தோனேசியாவுடன் மேற்கொள்ளப்படவிருப்பதாகவும் அந்த ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தில் இருப்பதாகவும் இந்தியப் பாதுகாப்புச் செயலாளர் ராஜேஷ் குமார் சிங் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், வியட்நாம் ஒப்பந்தம் பகிரங்கமாக அறிவிக்கப்படாதுள்ள போதிலும், அது ஏற்கனவே கையெழுத்திடப்பட்டுள்ளது. இந்தோனேசியாவுடனான பேச்சுவார்த்தைகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. ஒப்பந்தம் விரைவில் இறுதி செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

வியட்நாமுடனான ஒப்பந்தம், பயிற்சி மற்றும் தளவாட ஆதரவு உட்பட 629 மில்லியன் டொலர் மதிப்புடையதாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த சுப்பர்சொனிக் குரூஸ் ஏவுகணைகளை இந்தியா ஏற்கனவே பிலிப்பைன்ஸுக்கு விற்பனை செய்துள்ளமை தெரிந்ததே.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *