மத்திய கிழக்கில் பதற்றம்..ஒரு வெளிநாட்டுத் தலைவரை அழைக்க புடின் திட்டம்

1 Min Read

ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடின் வெளிநாட்டுத் தலைவர் ஒருவரை அழைத்து, மத்திய கிழக்கில் பதற்றம் குறித்து விவாதிக்க திட்டமிட்டுள்ளதாக உயர்மட்ட செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.

தெஹ்ரானின் அணுசக்தி திட்டம்

ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனியின் மரணத்தை அடுத்து, தெஹ்ரானின் அணுசக்தி திட்டம் குறித்த பேச்சுவார்த்தைகள் “முற்றிலும் ஆக்கிரமிப்பிற்கு ஆளாகும் அளவிற்கு மோசமடைந்துவிட்டதால்” ரஷ்யா ஆழ்ந்த ஏமாற்றத்தை வெளிப்படுத்தியது.

russia says constant contact with iran எனினும், தாக்குதல்கள் தொடரும்போது ஈரானுடன் தொடர்ச்சியான தொடர்பில் இருப்பதாக ரஷ்யா கூறுகிறது.

டிமிட்ரி பெஸ்கோவ்

ஜனாதிபதி விளாடிமிர் புடினின் (Vladimir Putin) உயர்மட்ட செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறுகையில்,

“நாங்கள் ஈரானின் தலைமையுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். மேலும், அந்த நாட்டைச் சுற்றியுள்ள நிலைமை குறித்து விவாதித்து வருகிறோம்” என்றார்.

Vladimir Putin

மேலும் அவர், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் குறித்து விவாதிக்க திங்கட்கிழமை பிற்பகுதியில், ஒரு வெளிநாட்டுத் தலைவரை அழைக்க புடின் திட்டமிட்டுள்ளதாக பெஸ்கோவ் கூறினார். ஆனால் அவர் யார் என்பதை அவர் குறிப்பிடவில்லை.

Dmitry Peskov/Vladimir Putin

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *