இலங்கையின் மிகப்பெரிய பெருநிறுவனம் தலைமையிலான மனிதாபிமான முன்னெடுப்பான LOLC திவி சவிய, இங்கிலாந்தின் பசுமை அமைப்பின் (The Green Organisation UK) துணை நிறுவனமான சி.எஸ்.ஆர் சொசைட்டியால் (The Green Organisation UK) ஏற்பாடு செய்யப்பட்ட, சமூக அர்ப்பணிப்புக்கான சர்வதேச சி.எஸ்.ஆர் சிறப்பு விருதுகள் 2026-இல் மதிப்புமிக்க சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. நாட்டின் மிகவும் சவாலான காலகட்டங்களில் சிலவற்றின் போது, இலங்கை முழுவதும் உள்ள சமூகங்களை மேம்படுத்துவதில் அதன் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை இந்த அங்கீகாரம் எடுத்துக்காட்டுகிறது. இந்த முயற்சியானது அதன் தொலைநோக்கு மனிதாபிமான மற்றும் சமூக தாக்கத்திற்காக உலகளாவிய CSR தலைவர்களிடையே கௌரவிக்கப்பட்டது.
LOLC ஹோல்டிங்ஸ் பிஎல்சியின் பிரதம செயற்பாட்டு அதிகாரி கித்சிறி குணவர்தன மற்றும் LOLC குழுமத்தின் பணிப்பாளர். நிவேய்ன் நாணயக்கார ஆகியோர் 2026 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 01 ஆம் திகதி இலண்டனில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க புனித போல் பேராலயத்தில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்வில் விருதை ஏற்றுக்கொண்டனர்.




