ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டி கபடி அணிகளுக்கு உற்சாக வரவேற்பு!

1 Min Read

சீனாவின் சான்யாவில் நடைபெற்ற 6ஆவது ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்று நாட்டிற்குப் பெருமை சேர்த்த இலங்கை தேசிய கபடி அணிகள் நேற்று (29) நாடு திரும்பின.

வீரர்களை வரவேற்பதற்காக இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சின் சார்பில் விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எஸ். அச்சுதன் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த பணிப்பாளர் நாயகம், அமைச்சர் சுனில் குமார கமகே வழிகாட்டலின் கீழ், எதிர்காலத்தில் இவ்வாறான சர்வதேச வெற்றிகளை நோக்கி வீரர்களை வழிநடத்த தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என உறுதியளித்தார்.No photo description available.May be an image of textMay be an image of wedding

இப்போட்டித் தொடரில் மதுரிகா ஹன்சமாலி தலைமையிலான மகளிர் அணி வரலாற்றுச் சிறப்புமிக்க வெள்ளிப் பதக்கத்தையும், ஆடவர் அணி வெண்கலப் பதக்கத்தையும் வென்றெடுத்தன.

வெற்றி பெற்ற அணிகளின் விபரம்:

மகளிர் அணி (வெள்ளிப் பதக்கம்):
மதுரிகா ஹன்சமாலி (தலைவி)
திலுக்சனா விமலநேந்திரன்
ஹன்சிகா குமுதினி
கஜேந்தினி ராசா
பிரியவர்ணா ரசாதுரை
ஷானிகா சுதர்ஷனி
ஆடவர் அணி (வெண்கலப் பதக்கம்):
மிலிந்த சதுரங்க
சமின்த சந்துஷ்ட
டிலான் சஞ்சய
ருவன் சமரகோன்
மொஹமட் அன்சாப்
ஆபித் அகார்

நாட்டிற்கு கீர்த்தியை ஈட்டித் தந்த இந்த வீர வீராங்கனைகளின் வெற்றிக்காக இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *