நாடு முழுவதும் உள்ள கோயில்கள் மற்றும் மத நிறுவனங்களின் வசம் உள்ள தங்கத்தைப் பணமாக்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவலுக்கு அரசாங்கம் விளக்கம் அளித்துள்ளது.
தங்கப் பத்திரங்கள் வழங்க
அத்தகைய தகவல்கள் சமூக ஊடக ஊகங்கள் முற்றிலும் பொய்யானவை, திசைதிருப்பக்கூடியவை மற்றும் எவ்வித அடிப்படை இல்லாதவை என்று அரசாங்கம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், கோவில்களின் தங்க இருப்புகளுக்கு ஈடாக, அவற்றுக்கு தங்கப் பத்திரங்களை வழங்க அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக இணையத்தில் பரவலாகப் பேசப்பட்டு வந்த ஊகங்களுக்கு மத்தியில், இந்த விளக்கம் வெளியாகியுள்ளது.
கோபுரங்கள், கதவுகள் மற்றும் அலங்காரத் தகடுகள் உள்ளிட்ட கோயில் கட்டமைப்புகளில் பயன்படுத்தப்பட்டுள்ள தங்கம், இந்தியாவின் உத்திசார் தங்க இருப்புகளின் ஒரு பகுதியாகக் கருதப்படும் என்று கூடக் கூறும் பதிவுகள் சமூக ஊடகங்களில் உள்ளன.
நிதி அமைச்சகம் இந்தக் கருத்துகளைத் திட்டவட்டமாக நிராகரித்துள்ளது; அத்தகைய முன்மொழிவு எதுவும் இல்லை என்றும், குடிமக்கள் இத்தகைய வதந்திகளை நம்புவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் விளக்கமளித்துள்ளது.
மட்டுமின்றி, சரிபார்க்கப்படாத தகவல்களை நம்புவதையோ அல்லது பரப்புவதையோ தவிர்க்குமாறு குடிமக்களை அறிவுறுத்துவதுடன், தவறான தகவல்கள் பொதுமக்களிடையே தேவையற்ற பீதியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

4,000 டன்கள் வரை
மேலும், எந்தவொரு அதிகாரப்பூர்வ கொள்கை முடிவோ அல்லது நிதித் திட்டமோ, அங்கீகரிக்கப்பட்ட அரசுத் தளங்கள் மற்றும் வழிகள் வாயிலாக மட்டுமே அறிவிக்கப்படும் என்று அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.
இந்தியாவில் உள்ள கோயில்களில் பக்தர்களால் பல நூற்றாண்டுகளாகச் செலுத்தப்பட்ட காணிக்கைகள் மூலம் 3,000 முதல் 4,000 டன்கள் வரை தங்கம் இருப்பு உள்ளதாக உலக தங்க கவுன்சில் மதிப்பிட்டுள்ளது.

இந்த தங்கம் கோயில்களின் பாதுகாப்பறைகளில் சேமிக்கப்பட்டு வருகிறது. திருப்பதி கோயில், பத்மநாபசாமி கோயில் உள்ளிட்ட கோயில்கள் வசம் பல ஆயிரம் கோடி மதிப்புள்ள தங்கம் உள்ளன.
ஈரான் போர் காரணமாக அந்நிய செலாவணியை சேமிக்க அரசு தங்கம் மீதான இறக்குமதி வரியை அதிகரித்தது. இந்த நிலையிலேயே வீடுகளிலும் மத அமைப்புகளிடமும் தங்கம் எந்த பயனும் இல்லாமல் இருப்பதாகவும் அதனை நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் என்றும் சமூக ஊடகங்களில் தொடர்ச்சியாக விவாதிக்கப்பட்டு வருகிறது.



