இத்தாலியில் இளம் பெண்ணை சீண்டிய இலங்கையர்: பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை

1 Min Read

இத்தாலியில் பெண் ஒருவர் மீது பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இலங்கையர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இத்தாலியில் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை

இத்தாலியின் நேப்பிள்ஸ் நகரில் Piazza Garibaldi சுரங்கப்பாதையின் 2வது வழித்தடத்தில் பெண் ஒருவரை இளைஞர் ஒருவர் பாலியல் சீண்டல் செய்துள்ளார்.

சம்பந்தப்பட்ட பெண், அந்த இளைஞரின் பாலியல் சீண்டலில் இருந்து தப்பித்து அருகிலிருந்த ரயில்வே பொலிஸாரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த தகவலின் அடிப்படையில், சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டார்.

இத்தாலியில் இளம் பெண்ணை சீண்டிய இலங்கையர்: பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை | 29 Years Old Srilankan Arrested In Italy

இலங்கையர் கைது

இந்நிலையில் பெண்ணை பாலியல் சீண்டல் செய்து பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இளைஞர், இலங்கையை பூர்வீகமாக கொண்ட 29 வயதுடைய இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவர் மீது தற்போது பாலியல் சீண்டல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கொள்ளை, திருட்டு மற்றும் பாலியல் சீண்டல்களை கட்டுப்படுத்துவதற்காக நேப்பிள்ஸ் மத்திய ரயில் நிலையம் மற்றும் Piazza Garibaldi ஆகிய பகுதிகளில் பாதுகாப்பு பிரிவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *