இந்தியாவில் நுகர்வோருக்கு பெட்ரோல், டீசல் விலை உயர்வை தடுக்க, எண்ணெய் நிறுவனங்கள் தினசரி ரூ.1600 கோடி இழப்பை எதிர்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்தியாவின் பெட்ரோல், டீசல் விலை கடந்த மூன்று ஆண்டுகளாக நிலையாக உள்ளது.
ஆனால், உலகளவில் ஈரான் போரின் காரணமாக கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 120 டொலர் வரை உயர்ந்துள்ளது.
இதனால், இந்திய எண்ணெய் நிறுவனங்கள் (IOC, BPCL, HPCL) தினசரி ரூ.1,600 கோடி இழப்பை சந்தித்து வருகின்றன.

தற்போது இந்தியாவில் பெட்ரோல் விலை ரூ.94 முதல் ரூ.105 வரை, டீசல் ரூ.87 முதல் ரூ.90 வரை விற்கப்படுகிறது.
ஆனால், உண்மையான செலவின அடிப்படையில் பெட்ரோல் ரூ.113 மற்றும் டீசல் ரூ.123-ஆக இருக்க வேண்டும். அதாவது, லிட்டருக்கு பெட்ரோலில் ரூ.18 மற்றும் டீசலில் ரூ.35 இழப்பு ஏற்படுகிறது.
இந்த விலை நிலைத்தன்மை, இந்தியாவில் பணவீக்கத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. அனால், நீண்டகாலத்தில் எண்ணெய் நிறுவனங்களின் நிதி நிலை பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. மாதத்திற்கு ரூ.45,000 முதல் ரூ.50,000 கோடி வரை இழப்பு ஏற்படும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
அரசு, எரிபொருள் விலையை கட்டுப்படுத்த வரியை (Excise Duty) குறைத்துள்ளது. ஆனால், இது நிறுவங்களின் இழப்பை குறைக்க போதுமானதாக இல்லை என கூறப்படுகிறது.
விலை உயர்வை கட்டுப்படுத்தும் இந்த கொள்கை, சுத்திகரிப்பு மற்றும் எரிசக்தி முதலீடுகளை தாமதப்படுத்தும் அபாயம் உள்ளது.
சமீபத்திய போர்நிறுத்தம் காரணமாக கச்சா எண்ணெய் விலை தற்காலிகமாக குறைந்தாலும், மத்திய கிழக்கீழ் பதற்றம் தொடர்வதால் விலை மீண்டும் பீப்பாய்க்கு 100 டொலர் வரை உயரக்கூடும்.




