பெண் ஒருவர் ஒரே ஆண்டில் 7.2 பில்லியன் டொலர் நன்கொடை வழங்கியது, ஓர் ஆண்டில் வழங்கப்பட அதிக நன்கொடையாக உள்ளது.
7.2 பில்லியன் டொலர்கள் நன்கொடை
அமெரிக்காவில் இதுவரை அதிக நன்கொடை வழங்கிய முதல் 25 நபர்களின் பட்டியல்கள் போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியலில், 68.3 பில்லியன் டொலர்களுடன் வாரன் பபெட் முதலிடத்திலும், 52.6 பில்லியன் டொலர்களுடன் பில்கேட்ஸ் மற்றும் மெலிண்டா 2வது இடத்திலும் உள்ளனர்.
26.4 பில்லியன் டொலர்களுடன் மெக்கென்சி ஸ்காட் இந்த பட்டியலில் 3வது இடம் பிடித்துள்ளார்.

இதில், கடந்த 2025 ஆம் ஆண்டில் மட்டும் 186 நிறுவனங்களுக்கு 7.2 பில்லியன் டொலர்கள்(இந்திய மதிப்பில் சுமார் ரூ.65,325 கோடி) நன்கொடை வழங்கியுள்ளார். இது ஒரே ஆண்டில் வழங்கப்பட்ட அதிகபட்ச நன்கொடை ஆகும்.
மெக்கென்சி ஸ்காட் 55 வயதான மெக்கென்சி ஸ்காட், அமேசான் நிறுவனர் ஜெப் பெஸோஸின் முன்னாள் மனைவி ஆவார்.

1993ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இவர்களின் திருமணம் நடைபெற்றது. 1994 ஆம் ஆண்டு ஜெப் பெஸோஸ் அமேசான் நிறுவனத்தை துவங்கினார்.

இந்த தம்பதிக்கு 3 ,குழந்தைகள் பிறந்தது. ஒரு சீன குழந்தையை தத்தெடுத்தனர். 25 ஆண்டுகள் கழித்து 2019 ஆம் ஆண்டு இவர்களின் திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிவடைந்தது.
அப்போது உலகின் முதல் பணக்காரராக திகழ்ந்த ஜெப் பெஸோஸ், அமேசான் நிறுவனத்தில் தான் வைத்திருந்த 16% பங்குகளில் 4% மெக்கன்சிக்கு ஜீவனாம்சமாக வழங்கினார். இதன் மதிப்பு 35.6 பில்லியன் டொலர்களாகும்(இந்திய மதிப்பில் சுமார் ரூ.2.50 லட்சம் கோடி).

மெக்கன்சி தன்வசம் உள்ள அமேசான் நிறுவனத்தின் கீழ் வரும் வாஷிங்டன் போஸ்ட் மற்றும் ப்ளூ ஆர்ஜின் நிறுவனத்தின் பங்குகளை ஜெப் பெஸோஸுக்கு விட்டுக் கொடுப்பதாக கூறினார்.
இது உலகின் விலைமதிப்பு மிக்க விவகாரத்தாக கருதப்பட்டது. இதன் மூலம், உலகின் 3வது பணக்கார பெண்மணி என்ற நிலைக்கு மெக்கென்சி ஸ்காட் உயர்ந்தார். இவ்வளவு தொகையை அளித்தும் உலகின் முதல் பணக்காரராக ஜெப் பெஸோஸ் தொடர்ந்து இருந்தார்.
விவாகரத்தின் போது பெற்ற அமேசான் பங்குகளில் 75சதவீதத்தை நன்கொடையாக வழங்கி விட்டதாக மெக்கென்சி ஸ்காட் தெரிவித்துள்ளார்.

2021 ஆம் ஆண்டில், பள்ளி அறிவியல் ஆசிரியர் டான் ஜூவெட்டை என்பவரை திருமணம் செய்த மெக்கென்சி ஸ்காட் , 2023 ஆம் ஆண்டில் அவரிடமிருந்து விவாகரத்து பெற்றார்.
2025 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் 3 மாதங்களில் 18 கறுப்பின கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு குறைந்தது 760 மில்லியன் டொலர்களை நன்கொடையாக வழங்கினார்.
விவாகரத்துக்குப் பிறகு 6 ஆண்டுகளில் ஸ்காட் 2,000 க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு 19 பில்லியனுக்கும் அதிகமாக நன்கொடை அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இவர் கடந்த ஆண்டு அளித்துள்ள நன்கொடை, எலோன் மஸ்க், முன்னாள் கணவர் ஜெப் பெஸோஸ், லாரி பேஜ் லாரி எலிசன் ஆகியோர் வாழ்நாளில் மொத்தமாக அளித்துள்ள நன்கொடைகளை விட அதிகம்.
மேற்பார்வையில்லா நன்கொடை
ஆனால் மெக்கென்சி ஸ்காட் அளித்துள்ள நன்கொடைகளை விமர்சித்துள்ள Y காம்பினேட்டர் CEO கேரி டான், “மேற்பார்வை இல்லாமல், அதைத் தொடர்ந்து வரும் குழப்பங்களுக்கு எந்தப் பொறுப்பும் இல்லாமல் மெக்கென்சி ஸ்காட் நன்கொடை வழங்கியுள்ளார்.
இது நிர்வாகக் கடமை அல்ல. உண்மையான மனிதநேயத்திற்கு உண்மையான அக்கறையும் கவனமும் தேவை. தரையில் சர்க்கரையை ஊற்றவா? எறும்புகள் வருகின்றன” என தெரிவித்துள்ளார்.
வாரன் பபெட், பில்கேட்ஸ் ஆகியோர் தாங்கள் நன்கொடை வழங்கும் நிறுவனங்களுடன் நீண்ட கால உறவை மேற்கொள்வார்கள். நன்கொடை எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது? அதன் விளைவு என்னவாக உள்ளது என கண்காணிப்பார்கள்.
ஆனால், மெக்கென்சி ஸ்காட் நன்கொடை வழங்கபட்டுள்ள மின்னஞ்சல் தவிர வேறு எந்த உரையாடலும் மேற்கொள்ள மாட்டார் என தெரிவித்துள்ளார்.




