அவுஸ்திரேலியாவில் யூதர்களை துப்பாக்கியால் சுட்ட நபர் இந்தியர் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.
Contents
16 பேர் உயிரிழப்பு
சிட்னியின் போண்டி கடற்கரையில் யூதர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 16 பேர் உயிரிழந்தனர்.
இந்தத் தாக்குதலை நடத்தியவர்கள் 50 வயது தந்தை மற்றும் அவரது 24 வயது மகன் என முதலில் தெரிய வந்தது.
இந்த நிலையில், தாக்குதல்தாரியான சாஜித் அக்ரம் (50) ஒரு இந்தியர் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியர்
சம்பவ இடத்திலேயே சுட்டுக்கொல்லப்பட்ட சாஜித் அக்ரமின் பாஸ்போர்ட் மூலம், அவர் ஒரு இந்தியர் என்று தெரிய வந்துள்ளார்.
அவர், 1998ஆம் ஆண்டில் அவுஸ்திரேலியாவில் குடியேறியதாக பொலிஸார் விசாரணையில் தெரிய வந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. 





