அகத்தியர் மகாசித்தரின் ஜீவ நாடி வாக்கில் உரைக்கப்பட்டதன்படி நர்மதை நதியில் உருவான பஞ்ச சுயம்பு லிங்கங்கள் காசி கங்கையில் அபிஷேக பூஜைகள் செய்து திருவண்ணாமலையிலும் ஜீவ நாடி அருளாளர் சிவ ஜானகி ராமன், கார்த்திக் மற்றும் அகத்தியர் கூட்டுப்பிரார்த்தனை குழுவினரால் 10 நாட்கள் பூஜிக்கப்பட்டு, சித்தாண்டி வேலோடு முருகன் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. வைகாசி விசாக முகூர்த்தத்தில் இலங்கை சித்தர் பீட குருமுதல்வர் யோகி கோபிநாத் சுவாமிகள்,சித்தர்களின் குரல் குருஜி சித்தவித்யார்த்தி சிவ சங்கர் சுவாமிகள் ஆலய பூசகர் முத்துலிங்கம் தவராஜா கப்புவனார் ஆகியோரால் ஆலய தர்மகர்த்தா சுப்பிரமணியம் தியாகராஜா, திருமதி தனலட்சுமி ஆகியோர் முன்னிலையில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இந்த அருள்நிறைந்த பஞ்ச லிங்கங்களுக்கு பக்தர்கள் அவர்களின் கரங்களாலே அபிஷேகம் பூஜைகள் செய்து வழிப்படமுடியும்.



