இஸ்ரேலிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள காசாவுக்குச் சென்று கொண்டிருந்த மனிதாபிமான உதவிக் கப்பல் குழுவைச் சேர்ந்த இருவர் நேற்று இஸ்ரேல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
ஸ்பெயினைச் சேர்ந்த சைஃப் அபு கெஷெக் மற்றும் பிரேசிலைச் சேர்ந்த தியாகோ அவிலா ஆகிய இருவரும் அஷ்கெலோனில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாக சர்வதேச ஒருங்கிணைப்பாளர் மிரியம் அசெம் தெரிவித்தார்.
காசா உதவி படகு குழு செயற்பாட்டாளர்களான இந்த இருவரையும் மேலும் இரண்டு நாட்களுக்கு தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.



