இஸ்ரேலின் கண்காணிப்புக்கு உள்ளாவதைத் தவிர்த்துக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு சக்திவாய்ந்த புதிய ஆயுதத்தை லெபனானின் ஹிஸ்புல்லா போராட்டக் குழு பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபைபர்-ஆப்டிக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்த புதிய வகை ட்ரோன் குவாட்கொப்டர் என்றும், இது ஹிஸ்புல்லா அதிகளவில் தற்போது பயன்படுத்திவரும் ஓர் துல்லிய தாக்குதல் ஆயுதம் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த ட்ரோன்களை நிறுத்துவது கடினம், அவற்றைக் கண்டறிவது அதைவிடக் கடினம். இவை, நெரிசலுக்கு உள்ளாக்கப்படக்கூடிய எந்தவொரு சமிக்ஞையையும் வெளியிடாமல், இலக்கின் உயர்-தெளிவுத்திறன் கொண்ட காட்சியை அவற்றை இயக்குபவர்களுக்கு அளிக்கும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.



