சக்தி வாய்ந்த புதிய ஆயுதத்தை ஹிஸ்புல்லா பயன்படுத்துகிறது

1 Min Read

இஸ்ரேலின் கண்காணிப்புக்கு உள்ளாவதைத் தவிர்த்துக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு சக்திவாய்ந்த புதிய ஆயுதத்தை லெபனானின் ஹிஸ்புல்லா போராட்டக் குழு பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபைபர்-ஆப்டிக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்த புதிய வகை ட்ரோன் குவாட்கொப்டர் என்றும், இது ஹிஸ்புல்லா அதிகளவில் தற்போது பயன்படுத்திவரும் ஓர் துல்லிய தாக்குதல் ஆயுதம் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த ட்ரோன்களை நிறுத்துவது கடினம், அவற்றைக் கண்டறிவது அதைவிடக் கடினம். இவை, நெரிசலுக்கு உள்ளாக்கப்படக்கூடிய எந்தவொரு சமிக்ஞையையும் வெளியிடாமல், இலக்கின் உயர்-தெளிவுத்திறன் கொண்ட காட்சியை அவற்றை இயக்குபவர்களுக்கு அளிக்கும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

இந்த ட்ரோன்கள் தகவல் தொடர்பு நெரிசலுக்கு உட்படாதவை, இலத்திரனியல் அடையாளம் இல்லாததால், அவை எங்கிருந்து ஏவப்பட்டன என்பதைக் கண்டறிவதும் சாத்தியமற்றது என்று இஸ்ரேலின் தேசியப் பாதுகாப்பு ஆய்வுக் கழகத்தின் சிரேஷ்ட ஆய்வாளர் யெஹோஷுவா காலிஸ்கி தெரிவித்துள்ளார்.

ஃபைபர்-ஒப்டிக் ட்ரோன்கள் சாதாரணமானவையாகக் காணப்படுவதால் திறம்படச் செயல்படுகின்றன. ட்ரோனைத் தொலைவிலிருந்து கட்டுப்படுத்தும் கம்பியில்லா சமிக்ஞைக்குப் பதிலாக, ஃபைபர்-ஒப்டிக் கேபிள் ட்ரோன் அதன் இயக்குபவருடன் நேரடியாக இணைக்கிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *