அரச பேருந்துகளில் பயணச்சீட்டு வழங்கப்படுவதில்லை என பயணிகள் புகார் அளித்துள்ளனர்.
இச் சம்பவம் மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் மஸ்கெலியா பகுதியில் இடம்பெற்று வருகின்றது.
நல்லதண்ணி முதல் கொழும்பு வரை அதிகாலை வேளையில் அவிசாவளை அரச பேருந்து நிலையத்திற்கு உரித்தான பேருந்து மற்றும் ஹட்டன் முதல் சாமிமலை மாலை வேளையில் செல்லும் அரச பேருந்துகளில் இவ்வாறான செயல் இடம்பெற்று வருகின்றது என அப் பேருந்துகளில் பயணம் செய்த பயணிகள் புகார் தெரிவித்தனர்.
இது குறித்து சம்பந்தப்பட்ட ஹட்டன் அரச பேருந்து நிலைய அதிகாரிகள் மற்றும் அவிசாவளை அரச பேருந்து நிலைய அதிகாரிகள் உடன் கவனம் செலுத்தி பயணிகளுக்கு முறையாக பயணச்சீட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அத்துடன் அடிக்கடி இப் பகுதியில் பயணச்சீட்டு பரிசோதனைகள் மூலம் பரிசீலனை மேற்கொள்ள வேண்டும்.



