போருக்கு மத்தியில்… பல மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்த ஈரான்

2 Min Read

ஹார்முஸ் நீரிணை முடக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டாலும், போருக்கு நடுவே ஈரான் இன்னும் மில்லியன் கணக்கான பீப்பாய் எண்ணெயை ஏற்றுமதி செய்து வருகிறது.

90 கப்பல்கள்

ஈரான் மீதான போர் தொடங்கியதன் பின்னர், கடந்த 18 நாட்களில் மட்டும் ஹார்முஸ் நீரிணையில் 90 கப்பல்கள் பயணப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

போருக்கு மத்தியில்... பல மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்த ஈரான் | Iran Exports Millions Of Barrels

இதில் பெரும்பாலான கப்பல்கள் ஈரானுடன் ஒப்பந்தம் மேற்கொண்டவை மற்றும் மேற்கத்திய நாடுகளின் தடைகளைத் தவிர்த்துச் செல்பவை என்றே தெரிய வந்துள்ளது.

மிகச் சமீபத்தில், அரசாங்கங்கள் பேச்சுவார்த்தைகளைத் தீவிரப்படுத்திய நிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தானுடன் தொடர்புடைய கப்பல்களும் நீரிணையை வெற்றிகரமாகக் கடந்துள்ளன.

ஹார்முஸ் நீரிணை கப்பல் போக்குவரத்திற்கு முடங்கிய நிலையில், எண்ணெய் விலை பீப்பாய்க்கு 100 டொலரைக் கடந்தது. இதனையடுத்து எண்ணெய் விலைகளைக் குறைக்கும் நம்பிக்கையில், போர்க்கப்பல்களை அனுப்புமாறும் நீரிணையை மீண்டும் திறக்குமாறும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது நட்பு நாடுகளையும் வர்த்தகப் பங்காளிகளையும் வலியுறுத்தினார்.

ஆனால், சீனா, ஜப்பான் உள்ளிட்ட எந்த நாடுகளும், அமெரிக்காவின் ஐரோப்பிய நட்பு நாடுகளும் அவரது கோரிக்கையை நிராகரித்தது. ஹார்முஸ் நீரிணை மூடப்படவில்லை என்றும், எதிரிகளின் கப்பல்கள் நீரிணையில் அனுமதிக்கப்படாது என்றும் ஈரான் தொடர்ந்து கூறி வருகிறது.

மட்டுமின்றி, கடந்த 18 நாட்களில் கிட்டத்தட்ட 20 கப்பல்கள் ஈரான் தாக்குதலுக்கு இலக்கானது. இருப்பினும், மார்ச் மாதத் தொடக்கத்திலிருந்து ஈரான் 16 மில்லியனுக்கும் அதிகமான பீப்பாய் எண்ணெயை ஏற்றுமதி செய்ய முடிந்துள்ளது.

போருக்கு மத்தியில்... பல மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்த ஈரான் | Iran Exports Millions Of Barrels

மேற்கத்தியத் தடைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய அபாயங்கள் காரணமாக, ஈரான் எண்ணெயின் மிகப்பெரிய வாங்குபவராகச் சீனா திகழ்கிறது. இந்த நிலையில் ஹார்முஸ் பகுதி மீதான தனது கட்டுப்பாட்டைப் பயன்படுத்தி, ஈரான் எண்ணெய் விற்பனையின் மூலம் லாபம் ஈட்டியதுடன், தனது சொந்த ஏற்றுமதி வழித்தடத்தையும் பாதுகாத்துக் கொண்டுள்ளது.

ஈரானுடன் தொடர்புடையவை

மார்ச் 1 முதல் 15 வரை, 16 எண்ணெய் கப்பல்கள் உட்பட குறைந்தது 89 கப்பல்கள் ஹார்முஸ் நீரிணையைக் கடந்தன. போருக்கு முன்பு நாளொன்றுக்கு ஏறத்தாழ 100 முதல் 135 கப்பல்கள் நீரிணையைக் கடந்தன.

போருக்கு மத்தியில் பயணப்பட்ட 89 கப்பல்களில் ஐந்தில் ஒரு பங்கிற்கும் அதிகமானவை ஈரானுடன் தொடர்புடையவை என்று கருதப்படுகிறது; எஞ்சியவற்றில் சீனா மற்றும் கிரீஸுடன் தொடர்புடைய கப்பல்களும் அடங்கும்.

ஞாயிறன்று பாகிஸ்தான் கொடியுடன் எண்ணெய் கப்பலொன்று கடந்துள்ளது. இந்திய கொடியுடன் இரண்டு எரிவாயு கப்பல்களும் கடந்துள்ளன.

போருக்கு மத்தியில்... பல மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்த ஈரான் | Iran Exports Millions Of Barrels

இதனிடையே, ஹார்முஸ் நீரிணை வழியாக ஈராக்கிய எண்ணெய் கப்பல்களை அனுமதிப்பது குறித்து ஈராக் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

ஈரான் போர் தொடங்கியதிலிருந்து, எண்ணெய் விலைகள் 40 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்து, ஒரு பீப்பாய்க்கு 100 டாலருக்கும் அதிகமாகச் சென்றுள்ளன.

இந்த நிலையில், ஈரானின் எண்ணெய் அமைப்பு மற்றும் ஏற்றுமதிக்கு முக்கியத்துவம் வாய்ந்த, ஈரான் கடற்கரைக்கு அப்பால் அமைந்துள்ள கார்க் தீவிலுள்ள இராணுவத் தளங்கள் மீது அமெரிக்கா குண்டுவீசியது. இதுவும், மேற்கத்திய நாடுகளின் கப்பல்களை ஈரான் அனுமதிக்க மறுப்பதன் முதன்மையான காரணங்களில் ஒன்று.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *