அரசு நடவடிக்கை எடுக்காது என்ற துணிச்சலில் இருக்கிறார்களா?

1 Min Read

“தமிழக பெண்கள் பீதியில் உறைந்து போய் இருக்க, எதற்குமே பொறுப்பேற்காத தவெக அரசு, என்ன நடந்தாலும் நடவடிக்கை எடுக்கப் போவதில்லை என்ற துணிச்சலில் தான் குற்றவாளிகள் ஊருக்குள் சுற்றித் திரிகிறார்களா என்ற கேள்வி எழுகிறது” என திமுக எம்.பி கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “திருச்சி – கீழப்புலிவார் ரோடு பகுதியில் 14 வயது சிறுமி, கடத்திச் செல்லப்பட்டு பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்ட செய்தி அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.

தொடரும் இதுபோன்ற குற்றச் சம்பவங்களால் தமிழ்நாட்டுப் பெண்கள் பீதியில் உறைந்து போய் இருக்க, எதற்குமே பொறுப்பேற்காத இந்த தவெக அரசு, என்னவானாலும் நடவடிக்கை எடுக்கப் போவதில்லை என்ற துணிச்சலில் தான் குற்றவாளிகள் ஊருக்குள் சுற்றித் திரிகிறார்களா என்ற கேள்வி எழுகிறது. காவல்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதல்வர் விஜய், என்ன நடந்தாலும் பத்திரிகையாளர்களைச் சந்தித்து, தொடரும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் குறித்து விளக்கமளிக்கப் போவதில்லை என்று தெரிந்துவிட்டது. குறைந்தபட்சம் துறைசார் அதிகாரிகளாவது மக்கள் முன் விளக்கமளிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *